எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்கு

டில்லியில் காவல்துறையினரும் உளவியல் நிபுணர்களும் இணைந்து நிகழ்த்திய ஒரு கருத்தாய்வின்படி, டில்லியில் பதியப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு கேசுகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டவை என்று கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் எதிரிகளை பழிதீர்க்க இத்தகைய கற்பழிப்பு வழக்குகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. சில கேசுகளில் குடும்ப சச்சரவுகளில்கூட வேண்டாதவர்களை துன்புறுத்த ஒரு இளம் பெண்ணை “ஐயோ, கற்பழித்து விட்டானே!” என்று கூச்சலிடச் செய்த நிகழ்வுகளைக் கண்டிருக்கிறார்கள் இந்தக் குழுவினர்.

இன்னும் 15% வழக்குகளில் சில இளம் பெண்கள் தன் இச்சைப்பட்டு செக்ஸில் ஈடுபட்டபின், அதன் பின் விளைவுகளை நினைத்து பயப்பட்டு, சம்பத்தப்பட்ட ஆண்கள்மேல் கற்பழிப்பு புகார்களை அளித்துள்ளார்கள் என்பதும் வெளிவந்துள்ளது.

ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீங்கள் நினைக்கலாம், அவர்கள் வேறு வகை வழக்குகளை பதிவு செய்து எதிரிகளோடு சண்டையிட்டிருக்கலாமே, ஏன் கற்பழிப்பு வழக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், என்று.

இங்குதான் நம் சட்டமியற்றுபவர்களின் முட்டாள்தனம் தெளிவாகிறது. எந்தவித சாட்சியமும் தேவையில்லை, சாட்சியச் சட்டம் (Evidence act) இதில் அமுல் செய்யப்படமாட்டாது. ஒரு பெண்ணோ அவருடைய பெற்றோரோ புகார் கொடுத்தால் போதும், முழுமையாக கூற்றம் நிரூபிக்கப்படக்கூட அவசியமில்லை, குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு (கவனியுங்கள், ஆணுக்கு மட்டும்!) தணடனை என்று சட்டமியற்றினால் அது துர்பிரயோகம் (தவறான பயன்பாடு) செய்யப்படாமல் இருக்குமா?

கற்பழிப்பு, வரதட்சணை சாவு, வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், மனைவியை தற்கொலைக்குத் தூண்டுதல் (கனவனை மனைவி தூண்டினால் இந்தச் சட்டம் பாயாது) இதுபோன்ற சட்டங்கள் இத்தகைய வகையைச் சார்ந்தவை. இவை அநேகமாக பொய் வழக்குகள்தான். இத்தகைய வழக்கு நடைமுறையில் நிறைய பணம் விளையாடுகிறது.

அசத்தியமேவ ஜயதே!

கள்ளத் தொடர்புச் சட்டம்: திருத்த ஆண்கள் கோரிக்கை

சென்னை: "இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்" என, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக இந்தியாவில் கள்ளத் தொடர்புகளும், அதன் காரணமாக கொலைகளும் அரங்கேறி வருகின்றன.


இந்தச் சமூக அவலத்தில் தவறு செய்யும் கணவன்,மனைவி மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அவர்களது குழந்தைகள் அனாதைகளாகி விடுகின்றனர். இது இந்திய கலாசாரத்திற்கு முற்றிலும் விரோதமானது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு இந்தியத் தண்டனைச் சட்டம் 497ல் சில திருத்தம் கொண்டுவர முடிவு செய்து, மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுள்ளது.
இதுவரை இந்திய தண்டனைச் சட்டம் 497ல், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். பெண்களுக்கு விதி விலக்களித்து, பாதிக்கப்பட்டவராக பாவித்து விடுவித்ததன் விளைவாக, இன்று இந்தியாவில் கள்ளத் தொடர்புகளின் பாதிப்பு பெருகிவிட்டது. "சட்டங்கள் கடுமையானால் தான் குற்றங்களை குறைக்க முடியும்' என்பதை கருத்தில் கொண்டும் இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கவும், கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண் - பெண் இருவரும் தண்டனைக்கு உட்பட்டவர்கள் தான் என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசும், மத்திய அரசும் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்

ஒரு பொய் வழக்கின் பாதிப்பு

இபிகோ 498A பிரிவின்கீழ் போடப்படும் பொய் வழக்குகளில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாகச் சேர்த்துவிடலாம். கணவன், அவனுடைய வயதான பெற்றோர்கள், அவனுடைய உடன்பிறந்த பெண்கள், அவர்களுடைய 2, 3 வயதுக் குழந்தைகள், அண்டை வீட்டுக்காரர்கள், அவர்களுடைய நண்பர்கள், மேலும் (கற்பனையில் ஜோடிக்கப்பட்ட) வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்திய நிகழ்வின்போது, உடனிருந்து அதற்குத் துணை போனதாக தங்களுக்கு வேண்டாதவர்கள் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குத்தான் விசாரணையே கிடையாதே! புகார் கொடுத்தவுடனேயே, அந்தப் புகாரில் பட்டியலிடப்பட்ட அனைவரையும் - அது 85 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி, 3 வயது குழந்தையாக இருந்தாலும் சரி - கைது செய்து லாக்கப்பில் போட்டு விடுவார்கள். அதுவும் வெள்ளியன்று இரவு. அவர்கள் திங்கட்கிழமை கோர்ட்டு திறந்த பிறகுதான் ஜாமீனுக்கு மனு கொடுக்கமுடியும். அங்கும் சென்று அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று கடுமையாக வாதிடுவார்கள்.

இந்த 498A வழக்குகளின் பரிமாணத்தை ஒரு கற்பனை உதாரணத்தின் மூலம் விளக்க முற்படுகிறேன்.

இதுபோல் 498A வழக்குப் போடும் ஒரு மனைவி எல்லா தமிழ் வலைப் பதிவுகளையும் விடாமல் படிப்பவர். “கோண்டு மாமா” என்னும் வலைப்பதிவர் ’தன் “கார்”தான் ஒசத்திக் கார்’ என்று கூவிக் கொண்டிருக்கிறார் என்பதால் அவர்மேல் மிகுந்த கோபம். அவர்மேல் பழி வாங்க இதுதான் தக்க தருணம் என்று முடிவு செய்து அந்தப் பெண்குலத் திலகம், தன் புகாரில் ’பலான “கோண்டு” என்பவர் தன் கணவனின் நண்பர். அவரும் சேர்ந்துதான் என்னைக் கொடுமைப் படுத்தினார்’ என்று சேர்த்து விட்டார்.

அவ்வளவுதான். அவரும் கைது செய்யப்பட்டார். பாவம், அப்போதுதான் அவர் ஒரு வலைப்பதிவர் சந்திப்பில், மைசூர் போண்டாவைப் பிய்த்து சாம்பாரில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டு, போண்டாவுக்கு ஸ்காண்டினேவியா மொழியில் என்ன பெயர் என்று விளக்கிக் கொண்டிருந்தார்!

அவரைக் கைது செய்யப் போவதாகக் கூறியவுடன் பாவம் கோண்டு மாமா திகைத்துப் போய்விட்டார். ஆனாலும் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, “கைது செய்வதுதான் செய்கிறீர்கள். எப்படியும் நான் சீக்கிறமே ஜாமீன் வாங்கிவிடுவேன். ஆனால் என் வலைப்பதிவுக்குச் சென்று இரண்டு பின்னூட்டம் போட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று அந்த காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டதாக ஒரு செய்திச் சிதறல்!

(மேலே குறிப்பிடப்பட்ட கதை முழுதும் கற்பனையே)

ஐ.பி.எஸ். அதிகாரிக்கு 83 வயதில் விவாகரத்து

டிசம்பர் 28,2008 - நன்றி: தினமலர்

புதுடில்லி: மனைவியை விட்டு பிரிந்து 40 ஆண்டாக தனியாக வாழும் ஐ.பி.எஸ்.,அதிகாரிக்கு 83 வயதில் இப்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

டில்லியில் வசிப்பவர் கிஷன் பலானி; ஐ.பி.எஸ்., அதிகாரி. இவர் மனைவி விமலா; கருத்துவேறுபாடு காரணமாக நாற்பதாண்டாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார் கிஷன்.

இதை விசாரித்த கோர்ட்,"இருவரும் பல ஆண்டாக பிரிந்து வாழ்வதால், இவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை' என்று முடிவுக்கு வந்து, ஆதாரங்கள் அடிப்படையில் கிஷனுக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் விமலா அப்பீல் செய்தார். இதன் மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, "எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. இதற்கு என் கணவர், கருத்து வேறுபாடு காரணமாக, மருத்துவ சிகிச்சை அளிக்காமல் மறுத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படி கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், விமலா காலம் தாழ்த்தி, தொடர்ந்து கணவர் மீது புகார் கூறி வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஐகோர்ட்டில் அப்பீல் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பின், கிஷனுக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து அளித்த குடும்ப நல கோர்ட் உத்தரவை உறுதி செய்தது.

நீதிபதி குப்தா தன் தீர்ப்பில்,"நாற்பதாண்டாக கணவன் - மனைவி என்று எந்த வகையிலும் இருவரும் சேர்ந்திருக்கவில்லை. இந்த நிலையில், உடல் நிலை சரியில்லாத போது, அவருக்கு சிகிச்சை அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கணவன் மீது தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது சரியல்ல. நாற்பதாண்டாக, தனிமையில் தவிப்பதையும், மன வேதனை அடைந்திருப்பதையும் கணவன் சொல்வதை கோர்ட் ஏற்றுக்கொள்கிறது. அவருக்கு விவாகரத்து அளிப்பது சரிதான் என்றும் முடிவு செய்கிறது' என்று தெரிவித்தார்.
----------------------
நம் நாட்டில் திருமண சட்டங்கள் எவ்வளவு அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருக்கின்றன தெரியுமா!

கணவனைத் தற்கொலைக்குத் தள்ளிய காரிகை

”மனைவியின் பொய்ப்பேச்சை மட்டும் கேட்டு கணவனுக்கு எதிராக காவல்துறை கடுமையாகச் செயல்படும்போது கணவனைக் காப்பாற்றுவது யார்? அந்த ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்!” என்று கூறியபடியே தன் தலையில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு
முயன்றான் ஒரு அப்பாவிக் கணவன்.

இது 2008 டிசம்பர் 24-ம் நாள் சென்னை நீலாங்கரை காவல்நிலையம் முன்பு நிகழ்ந்தது. அந்த கணவனின் பெயர் மோஹன். வயது 38. வெட்டுவான்கனியைச் சேர்ந்தவர்.

ஆனால் அவr தன்மேல் தீயைப் பற்Raவைத்துக்கொள்ளுமுன் ஒரு போலீஸ்காரரால் தடுக்கப்பட்டார். அதன்பின் அந்தக் கணவன் தற்கொலைக்கு முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டான்.

அவன் ஏன் தற்கொலைக்குத் துணிந்தான்?

அவனுடைய மனைவி, கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக அவன்மேல் ஒரு பொய்ப் புகார் அளித்துள்ளாள். அந்தப் புகார் உண்மையானதுதானா என்பதை விசாரிக்காமல் போலீசார் இந்தக் கணவனை கைது செய்ய அவனுடைய வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

”நான் தினக்கூலிக்காரன். என் சொல்ப ஊதியத்தில்தான் என் குடும்பம் நடக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கான தேவைகளுக்கே என் ஊதியம் போதாமல் கஷ்டப்படும் நிலை. ஆனால் திடீரென்று என் மனைவி ரூ.5000 கொடுத்து ஒரு செல்ஃபோன் வாங்கியிருக்கிறாள். அந்தப் பணம் அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்டதற்காக நான் அவளைக் கொடுமை
செய்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள். இந்த நாட்டில் ஒரு பெண் என்ன சொல்கிற்றாளோ, அதுதான் உண்மையாக ஏற்கப்படுகிறது. ஆண்கள் என்றாலே அவர்கள் எல்லோரும் கயவர்கள், கிரிமினல்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த நிலையைக் கண்டு வெறுத்துப் போய்த்தான் நான்
தற்கொலைக்கு முயற்சித்தேன்” என்கிறார் அந்த மோகன்.

அது சரி, ஒரு மனைவி தற்கொலைக்கு முயற்சித்தால் என்றால்உடனே அவளுடைய கணவனை வளுடைய தற்கொலைக்குத் தூண்டினான் என்று கூறி கைத்து செய்துவிடுகிறார்களே. ஏன் அந்த மனைவியை இந்தக் கேசில் கைது செய்யவில்லை?

நல்ல மனம் படைத்த நண்பர்களே, நீங்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷன்ருக்கு, போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ, உடனே அந்தப் பெண்ணை கைது செய்யும்படி கோருங்கள்!

சென்னை போலீஸ் கமிஷனர் ஃபோன் நம்பர்: 044-044 - 28511003
ஈமெயில் : cop(@)vsnl.net

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் : 044 - 23452549
ஈமெயில் : copmount(@)hotmail.com

J2
அடையாறு 044-24913552

செய்தி - மைநேஷன்

மூலம்: டெக்கன் கிராணிகிள்

மகன் செத்தாலும் பரவாயில்லை, புருஷன் மேல் போட்ட வழக்குதான் முக்கியம்!

சென்னை: மூளை செயலிழந்த சேலம் சிறுவனின் உடலுறுப்புகளை தானம் கொடுப்பதில் தந்தை கையெழுத்திட மறுத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கீதா. இவரது மகன் நாஞ்சில் வளவன் (8). கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாக கீதாவிற்கு தகவல் வந்தது. நாஞ்சில் வளவனின் மூளை செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாஞ்சில் வளவனின் உடலுறுப்புகளை தானம் செய்வதாக கீதா கூறினார். சிறுவன், நேற்று அதிகாலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டான்.
டாக்டர்கள் செய்தது என்ன? : பரிசோதித்த டாக்டர்கள், நாஞ்சில் வளவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம் என்றும், சிறுநீரகத்தை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 15 வயது பெண்ணுக்கு பொருத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

உடலுறுப்பு தானம் பெறுவதற்கு முன், சம்பந்தப்பட்டவரின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அது போல் நாஞ்சில் வளவனின் பெற்றோரிடம் கையெழுத்தை டாக்டர்கள் கேட்டனர். தாய் கீதா மட்டும் கையெழுத்து போட்டார். தந்தை வரவில்லை எனக் கூறினர்.டாக்டர்கள், "தந்தையின் ஒப்புதல் கையெழுத்து இருந்தால் தான் உடல் உறுப்பு தானம் செய்ய முடியும்; அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இல்லையேல் சட்டசிக்கல் ஏற்படும்' என்று கூறினர்.

மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள், நாஞ்சில் வளவனின் தந்தை இளங்கோவிடம் டெலிபோனில் பேசினர்.இளங்கோ, தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய பேச்சளவில் சம்மதம் தெரிவித்தார். எழுத்துப் பூர்வமாக கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவனின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளது.

இரண்டு ஆண்டு சிறை எதற்கு?

இளங்கோவிற்கும், கீதாவிற்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் இளங்கோ, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கீதா, போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பிறகு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.வரதட்சணை கொடுமை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கில் இளங்கோவிற்கு இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இளங்கோ இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாக தெரிகிறது. கீதாவும் இளங்கோவிற்கு தண்டனையை அதிகரிக்கக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளாராம்.தன் மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்கினால் வந்து கையெழுத்திடுவதாக இளங்கோ கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கீதாவும், உறவினர்களும், "நாஞ்சில் வளவன் செத்தாலும் பரவாயில்லை; வழக்கை வாபஸ் வாங்க முடியாது" என்று மருத்துவமனையில் கூச்சலிட்டனர்.மேலும், "மருத்துவமனை நிர்வாகம், நாஞ்சில் வளவன் உடலுறுப்புகளை தானம் பெற்றே தீரவேண்டும்' எனக் கூறி கீதா, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கூச்சலிட்டு, அழுது புரண்டார். அப்போது போலீசார் வந்து கீதாவை சமாதானப்படுத்தி, அப்புறப்படுத்தினர்.
மறுபடியும் டாக்டர்கள் மற்றும் போலீசார், இளங்கோவிடம் பேசினர். அவர்கள், இளங்கோவை அழைத்து வர சேலம் போலீசார் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறியுள்ளனர்.இளங்கோ வருவாரா வரமாட்டாரா என புரியாத நிலையில், உறுப்பு தானம் பெற ஓர் உயிரும், தானம் அளிக்க போராடிவரும் ஓர் உயிரும் காத்துக் கொண்டிருக்கின்றன.

கணவன்-மனைவி பிரச்னை - லஞ்ச பெண் எஸ்.ஐ. கைது

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் “கட்டப் பஞ்சாயத்து” நிலையங்களாக மாறிவருகின்றன. இதற்கு முன்பே ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்ச ஊழலில் கைதானார்.

முழுதும் தவறான பயன்படுத்தலுக்காகவே ஒரு சட்டத்தை (Sec 498A of IPC) இயற்றிவிட்டு, அதை அமுல்படுத்தும் துறையினர் யோக்கியர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலுமா?

மிரட்டி காசு பிடுங்கும் கூட்டுக் களவாணித்தனத்திற்காகவே இந்தச் சட்டம் பயன்படுகிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

டிசம்பர் 24,2008 - தினமலர்

சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார். எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
----------

தொடர்பான பதிவுகள்:-

1. கட்டப்பஞ்சாயத்து போலீஸ்
2. பெண் போலீஸாருக்கு ஐகோர்ட்டு சாட்டையடி!
3. வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்

ஆண்பாவ சாபத்தில் சிக்கிய திருச்சி போலீஸ்

”ஐயோ, இது ஆண்டவனுக்கே அடுக்காது. இனிமே அதுகூட குடும்பம் நடத்த முடியாது. தினமும் நான் படற பாடு எனக்குத்தான் சார் தெரியும். எப்படியாவது என்னை இந்த நரகத்திலேயிருந்து காப்பாத்துங்க...”


இப்படி அலறும் குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு பெண் என்று நினைத்தால்,... சாரி! திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் குரல்தான் இது!

மேலும் வாசியுங்கள்:-






>


செய்தி: ஜூனியர் விகடன்

நாத்தனார்கள் ஜாக்கிறதை

நீங்கள் ஆண்பிள்ளையா? உங்களுக்கு உடன் பிறந்த சகோதரி யாரேனும் உண்டா? அப்படியானால் உங்கள் திருமணத்தால் அவர்களும் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். இந்தச் செய்தியை வாசியுங்கள்.
------------
வடமதுரை அருகே பெண்ணிடம் வரதட்சணை கொடுமை - கணவர், நாத்தனார் கைது.

வடமதுரை,டிச.21-2008

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரது கணவர் மற்றும் நாத்தனாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் மாமனார், மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள காப்பிளியப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது28). கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (23). இவர்களுக்கு திருமணம் நடந்து 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.திருமணத்திற்கு முன்பு கார்த்திக் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே கம்பி கட்டும் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியிடம், மீண்டும் வட்டிக்கு பணம் கொடுக்கப்போகிறேன். எனவே உன் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் பணம் வாங்கி வா என்று கேட்டு கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவர்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரோஜா வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி வழக்கு பதிவு செய்து, கார்த்திக் மற்றும் ரோஜாவின் நாத்தனார் கவிதா ஆகியோரை கைது செய்தார்.மேலும் ரோஜாவின் மாமனார் முத்துதேவர், மாமியார் சுப்பம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இன்னொரு கணவனைக் கொன்ற காரிகை

விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி

பழனிசெட்டிபட்டி, டிச.20- 2008

தேனி அருகே விவசாயி மீது காரை ஏற்றி படுகொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியை அடுத்துள்ள திருச்செந்தூர் கிராமத்தினை சேர்ந்தவர் பாண்டி(வயது65), விவசாயி. இவருக்கும் இவரது மருமகன்களான ஜெயபிரபு(29), ரமேஷ் ஆகியோருக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் தேனி- போடி சாலையில் பாண்டி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பாண்டி சம்பவ இடத்தி லேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து பாண்டியின் உறவினர் வல்லவன் (42), பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாண்டி விபத்தில் இறக்கவில்லை என்பதும், சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது உறவினர்களே கொலை செய்ததும் தெரிய வந்தது.

அவரை அவரது மனைவியான பாக்கியலட்சுமி, மருமகன்கள் ஜெயப்பிரபு, ரமேஷ் மற்றும் உறவினரான அனுமந்தன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் காரை ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.இதனை அடுத்து பாண்டியை காரை ஏற்றி கொன்றதாக அவரது மனைவி பாக்கியலட்சுமி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவரை குத்திக்கொன்ற மனைவி

கொலையும் செய்வாள் பத்தினி!

சென்னை, டிச.19-2008: செய்தி: தினத்தந்தி

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை கத்தியால் குத்திக்கொன்றுவிட்டு இளம்பெண் தப்பியோடிவிட்டார்.

சென்னை லாட்ஜில் நடந்த பரபரப்பான இந்த படுகொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும் பெரம்பூரை சேர்ந்த நிக்கோலஸ் (வயது 27) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நிக்கோலஸ் ஆங்கிலோ-இந்திய பெண் ஆவார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆனது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நிக்கோலசுக்கு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பிரவீன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவீனை விட்டு நிக்கோலஸ் பிரிந்து சென்றுவிட்டார். மனைவியை சேர்த்து வைக்கும்படி பிரவீன், போலீஸ் கமிஷனிரிடம் மனு கொடுத்தார். போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர்.

கடந்த 10 நாட்களாக பிரவீனும், நிக்கோலசும் வீட்டிற்குச் செல்லாமல் குழந்தைகளுடன் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தனர்.

ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கு இடையே இனிமையான வாழ்க்கை நடக்கவில்லை. தொடர்ந்து சண்டை போட்டபடியே இருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை நிக்கோலஸ் லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே கைகளில் ரத்தக்கறையோடு ஓடிவந்தார்.

இந்த காட்சியைப் பார்த்ததும் லாட்ஜ் மானேஜர் என்னவோ ஏதோ என்று பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார்.

அவரது நெஞ்சு கத்தியால் குத்தி பிளக்கப்பட்டிருந்தது. மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர்.

தப்பியோட்டம்

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பிரவீனின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கணவரை கொலை செய்துவிட்டு நிக்கோலஸ் தப்பியோடியது தெரிய வந்தது. அவரை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர்.

தந்தையை இழந்து, தாயையும் கொலைகாரியாக பறிகொடுத்துவிட்டு மூன்று குழந்தைகளும் கதறி அழுதபடி இருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

------------

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்துள்ள இதுபற்றிய துண்டுச் செய்தி: “எங்கள் தாய்தான் எங்கள் அப்பாவைக் குத்திக் கொன்றுவிட்டாள்” என்று அந்தக் குழந்தைகள் கதறியவண்ணம் இருந்தன என்பதுதான்.

அதனால்தான் சொல்கிறேன், வேண்டாம் இந்தத் திருமணம் என்னும் பாம்புப் புற்று என்று!

ஐயோ பாவம் ஆண்கள் - ராணி கட்டுரை

தினத்தந்தி குழுமத்திலிருந்து வெளிவரும் "ராணி" வார இதழ் 21-12-2008 தேதியிட்ட பதிப்பில் இந்த இபிகோ 498A சட்டத்தின்படி தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் ஆண்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் பற்றி விரிவாக எழுதியுள்ளார்கள். அதன் மின்வடிவை இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதைப் பெரிதாக்கி வாசித்துவிட்டு, உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் இதுபோல் கெடுமதி கொண்ட பெண்கள் பொய் வழக்குகளைப் போட்டு குடும்ப வாழ்வு முறையையே கேலிக்கூத்தாக்கும் அவலத்தை தங்கள் வலைபதிவுகளிலும் எழுதி ஆண்களை எச்சரிக்கைப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.



வரதட்சணை கொடுத்த மணப்பெண் மீது வழக்கு


புதுடில்லி: மணக்கப்போகும் மணமகனுக்கு வரதட்சணை தந்ததாக மணப்பெண், அவரின் தாய், சகோதரர் மீது டில்லி பெருநகர கோர்ட்டில் போலீஸ் வழக்கு போட்டுள்ளது.


வரதட்சணை வாங்கியதாகத்தான், இதுவரை குற்றம்சாட்டி, போலீஸ் வழக்கு போட்டுள்ளது; தண்டனையும் வாங்கித் தந்துள்ளது; ஆனால், வரதட்சணை கொடுத்ததாக வழக்கு போட்டுள்ளது இதுவே முதன் முறை.


டில்லி நொய்டா பகுதியை சேர்ந்தவர் ஹரி; இவர் மனைவி சரிதா திடீரென தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். "என்னை இன்னும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார் கணவர். அவருக்கு நாங்கள் கொடுத்த வரதட்சணை பணம் 12 லட்சம், காரை பறித்து எனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்" என்று போலீசில் புகார் செய்தார் சரிதா.


இதையடுத்து, ஹரியை அழைத்து சிறையில் அடைத்த போலீசார், அவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு (IPC Sec 498A) பதிவு செய்தனர்.


"மிக அதிகமாக வரதட்சணை தந்ததாக கூறும் அவர்கள் பொருளாதார நிலையை போலீசார் ஆராய்ந்து, அதன்பின், என் மீது வழக்கு போட வேண்டும். நான் நிரபராதி' என்று கூறிய ஹரி, மனைவி சரிதா மீது பதிலுக்கு புகார் தந்தார்.ஆனால், போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் படி மனு செய்த அவருக்கு சாதகமான பதில் தகவல் கமிஷனரிடம் இருந்து வந்தது."என் மீது என் மனைவி கொடுத்த புகாரில் ஆதாரம் இல்லை; போலீசார் எந்த வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்று தெரிய வேண்டும் என்று மனுவில் கேட்டிருந்தார் ஹரி."மனைவியின் வாய்வழி வாக்குமூலத்தின் ஆதராத்தின் பேரில்தான் ஹரி மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது" என்று தகவல் உரிமை சட்டப்படி, அவருக்கு பதில் வந்தது.


இதையடுத்து, கோர்ட் டில் பதில் மனு தாக்கல் செய்தார் ஹரி. "என் மீது திட்டமிட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், வரதட்சணை தடை சட்டத்தின் கீழ், என் மனைவி மீது நான் கொடுத்த புகாரை நிராகரித்து விட்டனர்" என்று மனுவில் கூறியிருந்தார்.அவர் கோரிக்கையை ஏற்ற பெருநகர கோர்ட் மாஜிஸ்திரேட், "வரதட்சணை கொடுத்தாலும் சட்டப்படி குற்றம். இந்த வகையில் மோசடி செய்த குற்றத்துடன், இந்த வழக்கையும், சரிதா, அவர் தாய், சகோதரர் மீது போலீஸ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

(செய்தி: தினமலர்)

=================


இந்த நேர்மையற்ற சமூகத்தில் ஒரு ஆண்மகன் தன் உரிமையை நிலைநாட்ட, தனக்கு நேரும் அநியாயத்தை எதிர்த்து எப்படிப் போராடவேண்டியுள்ளது பார்த்தீர்களா?


ஆனால் திருமணம் என்ற புதைகுழியைத் தவிர்த்தால் ஆண்கள் நிம்மதியாக வாழலாம்.

500 தாத்தா, பாட்டிகள் வழக்கு


புதுடெல்லி, டிச.14: விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் சிக்கித் தவிக்கும் தங்களுடைய பேரக் குழந்தைகளை பார்க்கவும், கொஞ்சவும் உரிமை கோரி 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


வெளிநாட்டு கலாசாரமாக இருந்த விவாகரத்து, இப்போது இந்தியாவிலும் அதிகளவில் சாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் 40 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக சமீபத்தில் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் பிரிந்து வாழும் கணவன், மனைவிக்கு இடையே அவர்களின் குழந்தைககள் சிக்கித் தவிக்கின்றனர். 99 சதவீத விவாகரத்து வழக்குகளில் பிள்ளைகள் தாயிடமே ஒப்படைக்கப் படுகின்றனர். பிள்ளைகளை பார்க்க தந்தைக்கு ஒரு வாரம் முறையோ அல்லது மாதம் ஒரு முறைதான் அனுமதி அளிக்கப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, "கணவன் - மனைவி இடையே ஏற்படும் சண்டையால் பேரக் குழந்தைகளை பார்க்கவும், பேசவும் முடியாமல் எங்களின் உரிமை பறிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?" என்று டெல்லியில் 500க்கும் மேற்பட்ட தாத்தா, பாட்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

எனவே, விவாகரத்து செய்யும் பெற்றோரால் பாதிக்கப்படும் பிள்ளைகள், தாத்தா, பாட்டிகளுக்காக தனி வழிமுறை வகுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் இவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். வயதான காலத்தில் எங்களுக்கு பேரக் குழந்தைகளிடம் பேசுவதும், கொஞ்சுவதையும் விட என்ன சுகம் இருக்கப் போகிறது. எனவே, விவாகரத்து பெற்ற கணவன், மனைவியிடம் யாரிடம் பேரக்குழந்தைகள் இருந்தாலும் அவர்களை எந்த நேரத்திலும் சென்று பார்க்கவும், பேசி கொஞ்சவும் எங்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்று மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தைகளின் உரிமை

"பிரிந்த பெற்றோரின் பிள்ளைகளின் உரிமை அமைப்பு" (Children's Right Initiative for Shared Parenting - CRISP) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமே, பாதிக்கப்பட்ட தாத்தா&பாட்டிகள் சார்பாக குரல் கொடுக்கிறது. இதன் தலைவர் குமார் ஜாகிர்தர் (இவர் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் மனைவியின் முந்தைய கணவர்) கூறுகையில், "விவாகரத்து பெறும் கணவனும் மனைவியும், தங்கள் குழந்தைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பது பற்றி பல ஆண்டுகள் வழக்கு நடத்துகின்றனர். ஆனால், குழந்தைகளின் உரிமையைப் பற்றி யாரும் நினைத்து பார்ப்பது கிடையாது. கணவன் & மனைவி இடையே ஏற்படும் சண்டையால் குழந்தைகளும், அவர்களின் தாத்தா&பாட்டிகளும் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று கொதிக்கிறார்.

தனிக்குடுத்தனம் வைக்கவில்லையா, போடு வரதட்சணை வழக்கு!

சென்னை, டிச.13-2008 : செய்தி - தினத்தந்தி

பட்டதாரி மனைவி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் மெக்கானிக் வேலை பார்க்கிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் கல்பனா (25).

திருமணத்திற்கு பிறகு கல்பனா கணவரின் வீட்டில் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். மாமியார் திலகம், மைத்துனர் மகாலிங்கம், மைத்துனிகள் மீனாட்சி, மகாலட்சுமி ஆகியோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.
3 மாதங்கள் இனிதாக கழிந்த இல்லற வாழ்க்கையில் புயல் வீசி முருகன்-கல்பனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். கல்பனா, கணவர் முருகனை விட்டு பிரிந்து பெருங்களத்தூரில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார்.

இந்த நிலையில், கல்பனா ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

"நான் பட்டப்படிப்பு படித்துள்ளேன். திருமணத்தின்போது எனக்கு 25 சவரன் நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் என் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். மேலும் 15 சவரன் நகைகள் வரதட்சணையாக வேண்டுமென்று எனது கணவர் வீட்டில் வற்புறுத்தி வந்தனர். நாங்கள் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்ததால் எனது கணவரோடு நான் சந்தோஷமாக வாழ முடியவில்லை. தனிகுடித்தனம் செல்வதற்கு என் கணவரும் விரும்பவில்லை.

"செக்ஸ்' குறும்பு"

எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், என் கொழுந்தன் மகாலிங்கம் `செக்ஸ்' சேட்டைகள் செய்வார். இடுப்பை பிடித்து கிள்ளுவார். நான் குளித்துவிட்டு ஆடை அணிவதை ரகசியமாக பார்த்து ரசிப்பார்.
இதுபற்றியெல்லாம் என் கணவரிடம் கூறியபோதும், அவர் கண்டுகொள்வதில்லை. எனது மாமியாரும், மைத்துனிகளும் எனக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதனால் எனது கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டேன். என் கணவரை மீண்டும் என்னோடு சேர்த்து வைத்து, தனி குடித்தனம் செல்லவும் உரிய ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு கல்பனா புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டார்.

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்தினார். முருகனையும், கல்பனாவையும் அழைத்து வந்து கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி இருவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முருகன் தனி குடித்தனம் செல்ல விரும்பவில்லை என்றும், இதனால் கல்பனாவோடு சேர்ந்து வாழ முடியாது என்றும், ஜெயிலுக்கு போகவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போலீசாரின் சமாதான முயற்சி பலிக்கவில்லை. இதனால் முருகன், அவரது தாயார், தம்பி மற்றும் தங்கைகள் இருவர் மீதும் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முருகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது

-------------

இவள் தன் மச்சினன் செக்ஸ் குறும்பு செய்தான் என்றாள். இன்னும் சில பெண்குல சிகரங்கள் 80 வயது மாமனாரும், 3 வயது குழந்தையும் செக்ஸ் தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் கொடுப்பார்கள். இன்னும் சில புதுமைப் பெண்கள், "கணவனும் அவனுடைய தாயாரும் செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபட்டார்கள். தட்டிக் கெட்ட என்னை அடித்தர்கள்" என்று புகார் கொடுத்த கேசுகள் உண்டு. இதுபோல் பல "டெம்பிளேட்டுக்களை" வக்கீல்கள் கைவசம் வைத்திருப்பார்கள். கணவன்மேல் பொய்க் கேசு போடச் செல்லும் பத்தினிப் பெண்கள் தங்களுக்குத் தேவையான பொய்க் குவியல்களைப் பொறுக்கிக் கொள்வார்கள்!

ஆண்களே, இந்தக் கொடுமை உங்களுக்கு நிகழ வேண்டுமா? உங்களைப் பெற்ற பாவத்திற்காக உங்கள் பெற்றோர்களும் உடன் பிறப்புக்களும் இத்துணை கொடுமைகளையும் சிறுமைகளையும் அனுபவிக்கவேண்டுமா?

சிந்தியுங்கள்!

குடும்பத்தில் பிரச்னையா, போடு வரதட்சணை வழக்கு!

சமீபத்தில் "இப்படிக்கு ரோஸ்" என்னும் டி.வி நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அஜிதா என்பவர் (இவர் ஒரு பெண்ணியவாதி) ஒரு திடுக்கிடும் உணமையை வெளிப்படுத்தினார். அதாவது ஒரு மணமான பெண் தன் குடும்பத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பு தோன்றி, அதை எப்படித் தீர்த்து வைப்பது என்று இவர் போன்ற வக்கீல்களை அணுகினால், இவர்கள் அந்தப் பெண்களுக்கு உடனே சர்வ சாதாரணமாகக் கொடுக்கும் அறிவுரை, "IPC SEc. 498A-யில் (வரதட்சணைக் கொடுமைச் சட்டம்) கேசு போடலாம்" என்பதுதான்!

ஏனெனில் இதச் சட்டத்தின்படியான புகாரில் என்ன வேண்டுமானலும் எழுதலாம். சட்டம் மிகக் கடுமை என்பதால் கணவனையும் அவருடைய பெற்றோரையும் உடனே கைது செய்ய வைக்கலாம். வக்கீலுக்கும் சிரமப்பட்டு சட்ட நுணுக்கங்களுடன் வாதாடி வழக்கு நடத்த வேண்டிய தேவை இல்லை.

இது போன்ற புகாருக்கென்றே ஒரு template வைத்திருப்பார்கள். அதில் முதல் பாகத்தில் திருமணத்தின்போது இவ்வளவு நகை போட்டோம், இவ்வளவு பணம் கொடுத்தோம் என்றெல்லாம். இருக்கும். பின்னர் மேலும் பணம், நகை கேட்டு என்னைத் துன்புறுத்தினார் என்று எழுதப்படும்."துன்புறுத்தினார்(கள்)" என்பது மிக முக்கிய வாசகம். அது இல்லையென்றால் இந்த் 498A சட்டத்தை சேர்க்க முடியாது.

இதோ இன்றைய தினத்தந்தியில் வெளி வந்துள்ள செய்தியை காணுங்கள்.

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது. இரண்டாவது குழந்தை இறந்து பிறந்த பிறகு ஒரு மனக்கசப்பு தோன்றியிருக்கிறது. அதற்குத் தீர்வு? போடு, 498A வழக்கு!
-----------

தேவகோட்டை அருகே நகை, பணம் கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேவகோட்டை அருகே உள்ள சாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவருக்கும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் நைனாவயல் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 24 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் 2-வது குழந்தை பிறந்து இறந்தது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டது.

இதற்கிடையில் பாலசுப்பிர மணியன் வரட்சணையாக மேலும் தனக்கு பணம்-நகை தரவேண்டும் என தமிழ் செல்வியை கொடுமைப் படுத்தினாராம். இது குறித்து தமிழ் செல்வி தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் அமலராணி, சப்- இன்ஸ் பெக்டர் அனுராதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------
கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கைது செய்து கொடுமைப் படுத்தி, ஆண்களை "வேண்டாமையா திருமணம் என்னும் புதைகுழி" என்று ஓடவைத்து, இந்திய நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்வு முறையே நாசம் செய்து முடிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு இது போன்ற கொடுங்கோல் சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

நீங்கள் நினைக்கலாம், "அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ சிலர் இந்தச் சட்டத்தை தவறாக பயன் படுத்துவார்களாக இருக்கும்; இதைப் போய் இந்த ஆள் பெரிது படுத்தி ஒரு வலைப்பதிவில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறானே" என்று!

உண்மையில் இந்தப் பிரச்னையின் பயங்கரம் உங்களுக்குத் தெரியுமா? மத்திய அரசு ஆண்டு தோறும் குற்றங்கள் பற்றிய ஒரு புள்ளி விவரத்தை வெளியிடுகிறது. அது "தேசிய குற்றத் தரவு மையம்" (National Crime Records Bureau) என்னும் நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. அதனை http://ncrb.nic.in/ என்னும் வலைத்தளத்தில் காணலாம். அதில் கண்டுள்ளபடி 2007-ஆம் ஆண்டில் மட்டும் இந்த 498A சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் 75,930 ஆகும். இது முந்தைய ஆண்டைவிட 20.3% அதிகம். இந்தச் சட்டத்தினால் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்தச் சட்ட துஷ்பிரயோகம், இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரையாவது பாதிக்கப்பட்டவராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.

ஆண்கள் ஜாக்கிறதை!

நூதன வாடகைத்தாய் கலாசாரம்

சென்னையில் பரவும் நூதன வாடகைத்தாய் கலாசாரம் - ரூ.5 லட்சம் கொடுத்தால், சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்றுக் கொடுப்பார்கள் - செல்போனில் பேசி அழைக்கிறார்கள்

சென்னை, டிச.8- செய்தி: தினமலர்

சென்னையில் பணம் வாங்கிக்கொண்டு, சந்தோசத்தையும் கொடுத்து, குழந்தையும் பெற்று கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பணம் வாங்கிக் கொண்டு குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாய் கலாசாரம் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்த கலாசாரம் இந்தியாவிலும் வட மாநிலங்களிலும் உள்ளது. தற்போது சென்னை நகரிலும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது செல்போனில் மர்ம பெண் ஒருவர் பேசி `வாடகைத்தாய் வேண்டுமா? அழகான பெண்கள் 5 பேர் உள்ளனர். ரூ.5 லட்சம் கொடுத்தால் ஒரு வருடம் உங்களுடன் தங்கி இருப்பார்கள். உங்கள் உயிர் அணுவையும், உங்கள் மனைவியின் கரு முட்டையையும் செயற்கை முறையில் சேர்த்து கரு உண்டாக்கி அந்த கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெற்று கொடுக்கவும் தயார். அல்லது நீங்கள் குழந்தை பெற தகுதி உடையவராக இருந்தால், உங்கள் மனைவி சம்மதத்தோடு உங்களோடு உல்லாசமாக இருந்து, இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்' என்று சொல்கிறார்.

சென்னை கே.கே.நகரில் வாடகைத்தாய் சங்கம் வைத்துள்ளதாகவும், அந்த பெண்மணி சொல்கிறார். இந்த தகவல் சென்னை போலீசாருக்கும் தெரிய வந்துள்ளது.

உடல் உறவு மூலம் குழந்தை பெற்று கொடுப்பது சட்டப்படி தவறானது என்றும், அது வாடகைத்தாய் முறையில் வராது என்றும், அது நூதனமான விபசாரம் என்றும், போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது பற்றி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---------------

ஆனால் நம்நாட்டு சட்டங்கள், நீதிபதிகள், ஊடகங்கள், சமுதாயத்திலுள்ள பெரிய மனிதர்கள் ஆகியோர் ஆண்கள்தான் கெட்டு அலைகிறார்கள் என்று ஓலமிடுகின்றனர்!

மனைவி தற்கொலை கேசுகள்

மனைவி தற்கொலை செய்துகொண்டதற்கு கணவனும் அவனுடைய பெற்றோரும்தான் காரணம் என்று அந்த மனைவியின் பெற்றோரோ அல்லது உறவினரோ, மரணத்திற்குப் பின் புகார் கொடுத்தால், அவர்கள் உடனே கைது செய்து விடுவார்கள். "வழக்குதான் நடக்குமே, வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுத்தானே தண்டனை வழங்கப்படுகிறது" என்று நீங்கள் கேட்கலாம். அது நியாயமான கேள்வி. ஆனால் பலர் அறியாத ஒன்று என்னவென்றால், இதுபோன்ற மனவி தற்கொலை கேசுகளுக்காக தனிச் சட்டங்கள் உள்ளன. பொதுவான சட்டங்களான, சாட்சிகள் சட்டம் (Evidence Act) போன்றவை இவற்றிற்குப் பொருந்தா. மேலும் குற்றம் முழுதும் நிரூபிக்கப்படவேண்டாம். வெறும் சந்தேகம் மட்டும் இருந்தால் போதும் என்கிறது இந்தச் சட்டங்கள்.

ஆகையால்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், இந்தியாவில் இந்தியப் பெண்களை மணந்துகொள்வது இந்திய ஆண்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மிகவும் ஆபத்தானது. ஜாக்கிறதை!

இப்போது செய்திகளை வாசியுங்கள்:

1.மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சாவூர் அருகே மனைவியை வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு ஆறாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசம் வடுகத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (26). இவர் பாபநாசத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கபிஸ்தலம் தென்சறுக்கை கீதா மகள் ஜெயசுதா (20). இவர் பாபநாசத்தில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது சக்திவேலுக்கும், ஜெயசுதாவுக்கு காதல் மலர்ந்து, இருவரும் 2006ம் ஆண்டு ஆக., மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் சக்திவேல் வரதட்சணைக்கேட்டு ஜெயசுதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்தார். 2007ம் ஆண்டு ஏப்., 26ம் தேதி பிரசவ செலவுக்காக ஜெயசுதா வங்கியில் இருந்து ரூ.ஆயிரத்தை எடுத்து வந்தார். அந்த பணத்தை தருமாறு சக்திவேல், ஜெயசுதாவை அடித்து துன்புறுத்தினார்.

இதனால், மனமுடைந்த ஜெயசுதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த ஜெயசுதா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 2007ம் ஆண்டு அக்., ஏழாம் தேதி இறந்தார்.

இதுகுறித்து, ஜெயசுதாவின் தாயார் கீதா கொடுத்தப்புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சதீஸ்குமார் வழக்கை விசாரித்து சக்திவேலுக்கு வரதட்சணைக்கேட்டு துன்புறுத்தியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.ஐநூறு அபராதமும், தற்கொலைக்கு தூண்டியதுக்காக ஆறாண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
===========

2. பெண் தற்கொலை முயற்சி:வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் கைது

கோவையில் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தியதால் பெண் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அம்மன் காலனியை சேர்ந்த தங்கவேல் மகன் விவேகானந்தன் (வயது 32). இவருக்கும் கோவை நீலிக்கோணம்பாளையம் ரங்கே கவுடர் வீதியை சேர்ந்த சத்தியநாராயன் மகள் கிரிஜாவுக்கும் (24) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 10 பவுன் நகை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிரிஜாவிடம் அவரது கணவர் விவேகானந்தன் உனது அண்ணன் ரமேஷ்குமாரிடம் சென்று ரூ.11/2 லட்சம் வாங்கி வரும்படி சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்தது.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி சம்பவத்தன்று விவேகானந்தன் விஷபாட்டிலை கையில் வைத்துக்கொண்டு பணம் வாங்கிவராவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று விவேகானந்தன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது கிரிஜா அந்த விஷபாட்டிலை வாங்கி விஷத்தை குடித்துவிட்டார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து கிரிஜாவின் அண்ணன் ரமேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிராபேகம் வழக்குப்பதிவு செய்து, கிரிஜாவின் கணவன் விவேகானந்தனை கைது செய்தனர். விவேகானந்தன் மீது வரதட்சணை கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் சித்ரவதைக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தனின் பெற்றோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
===========

3. பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில்கணவன் உள்பட 3 பேருக்கு ஜெயில்தண்டனைசேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு ஜெயில்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:-

மேச்சேரி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கொட்டனூர்புதுரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் புஷ்பா என்கிற கிருஷ்ணவேணி (வயது20). இவருக்கும், மேச்சேரி அருகே உள்ள ஆண்டினிர் கொப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 6 பவுன்தங்க நகை, மாப்பிள்ளைக்கு மோதிரம் என புஷ்பாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர். புஷ்பா தனது மாமியார் லட்சுமி (45), மாமனார் குப்புசாமி(52) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

வீட்டில் புஷ்பாவுக்கு சரியாக சமைக்க தெரியவில்லை என்றும், கழி எப்படி கிண்டுவது என தெரியவில்லை என்றும் கூறி அடிக்கடி கணவன், மாமியார் மற்றும் மாமனார் கிண்டல் செய்து சித்ரவதை செய்தனர்.

இந்த மனவேதனையால் புஷ்பா அருகில் உள்ள காட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடந்த 16.2.2005 அன்று நடந்தது. இது குறித்து மேச்சேரி போலீசார் புஷ்பாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் அசோகன், மாமியார் லட்சுமி, மாமனார் குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி கோபால் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினார்.

3 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அசோகனுக்கு 7 ஆண்டு ஜெயில்தண்டனையும், ரூ.1000 அபராதமும், குப்புசாமி அவரது மனைவி லட்சுமி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தந்தைமை

இந்தியாவிலுள்ள நீதிபதிகளில் பெரும்பான்மையோர், தம்பதிகள் விவாகரத்தினால் பிரியும்போது, குழந்தைகளின் காப்புப் பொறுப்பை மனைவிகள் கையில்தான் ஒப்படைக்கிறார்கள். கணவனை ஒரு குற்றமும் இழைக்காதவனாகவும், பண்பும், பாசமும் உள்ளவனாகவும் அந்த நீதிபதி ஒப்புக் கொண்டாலும்கூட குழந்தையை மட்டும் பெண்கள் வசம்தான் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மனத்தில் பெண்கள்தான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள், தந்தை ஒரு பொறுப்பற்றவன் என்னும் எண்ணக் கட்டமைப்பு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.


இது எவ்வளவு தவறான கருத்தியல் என்பதை பல பெண்கள் மீண்டும் மீண்டும் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றும், பொறுப்பற்ற முரையில் வெறி கொண்டு பிற ஆண்களுடன் தவறன உறவு கொண்டும், தன்னலமே பெரிதாகக் கொண்டு குழந்தைகளைக் கவனிக்காமலிருந்தும் செவ்வெனே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனலும் குழந்தைகளை தந்தை வசம் நீதிபதிகள் ஒப்படைப்பதில்லை. சமீபத்தில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி குழந்தையின் விருப்பத்தைக் கேட்டபோது அது தெள்ளத் தெளிவாக தன் தந்தையிடம்தான் வளருவேன் என்று கூறி அழுதும்கூட அந்த நீதி(!)பதி குழந்தையை மனைவியிடம்தான் ஒப்படைத்தார்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், தகப்பனுக்கு வாரத்திற்கு ஒரு முறை "எட்டிப் பார்க்கும் உரிமை" (visiting right) மட்டும்தான் கொடுக்கப்படும். அதுவும் பலமுறை அது அவனுக்குக் கிட்டுவதில்லை. அந்த நாள் பார்த்து அந்தப் பெண்மணி குழந்தையை எடுத்துக் கொண்டு வேறு ஊர் சென்று விடுவாள். இதுபோல் நடந்தால் இதற்கு நிவாரணம் பெற கணவன்தான் தன் கைக்காசு சிலவு செய்து கோர்ட்டில் contempt of court கேசு போடவேண்டும். அது வாய்தா மேல் வாய்தாவாக இழுக்கும். அதற்குள் குழந்தை பெரிதாக ஆகிவிடும். அதற்கு தந்தையே நினைவிருக்காது. மேலும் தந்தையைப் பற்றி ஒரு தவறான கருத்தாக்கம் அந்தப் பிஞ்சு மனத்தில் பதிக்கப்படும்.

ஆனால், இப்போது நன்றாகக் கவனியுங்கள்.
இப்போது நான் சொல்லப்போவதுதான் கொடுமையிலும் கொடுமை, ஒலிம்பிக் கொடுமை. அந்தக் குழந்தையைக் கண்ணால் காணக்கூட உரிமையில்லாத அந்தக் கணவன்தான், குழந்தையின் பராமரிப்பு, படிப்பு முதலிய அனைத்து சிலவுகளுக்கும் மாதா மாதம் பணம் கொடுக்கவேண்டும். அதுவும் அந்தப் பெண்ணின் கையில். அப்படித்தான் தீர்ப்புக்கள் வழங்கப் படுகின்றன. Can there be a worse irony in this world!
அவள், குழந்தையின் நலனுக்கு அதைச் சிலவு செய்யாமல் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எந்தவித ஜல்ஸா செய்தாலும் கேள்வி கேட்க முடியாது.

என்ன சட்டமோ, என்ன கோர்ட்டோ, என்ன நீதியோ. அநியாயமய்யா இது!

சரி. இந்தத் தந்தைமார்கள் குழந்தைகளின் நலனுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் தெரியுமா? ஒருமுறை டிரெயினில் செல்லும்போது பார்த்தேன். மேல் இருக்கையில் படுத்திருந்த கணவன் ஒவ்வொரு முறையும் இறங்கி வந்து குழந்தைக்கு டயபர் மாற்றுவது, ஃபீடிங் பாட்டிலில் பால் ஊற்றி குழந்தைக்கு ஊட்டுவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். அந்த மகாராணி ஒய்யாரமாக தனக்கு ஒன்றுமே முடியவில்லை என்று முனகிக் கொண்டிருந்தாள். ஆனால் அடிக்கு ஒருதரம் விருத்துப் போண்டிருந்த தலைமுடியை ஸ்டைலாகக் கோதி விட்டுக் கொள்வதில் மட்டும் குறைவில்லை!

பெரும்பாலான குடும்பங்களில் இந்தக் கதைதான்.

சரி. இங்கே பாருங்கள். இரவு முழுதும் கியூ வரிசையில் நின்று காத்துக் கிடக்கிறார்களே, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் இடம் கிடைக்கவேண்டுமென்று, அவர்கள் யார்?




கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன் எரித்துக் கொலை - மனைவிக்கு ஆயுள் தணடனை

குடும்ப வன்முறைச் சட்டப்படி வன்முறை என்பது கணவனால் மட்டுமே செய்யப்படுவது. பாதிக்கப்பட்டவர் என்றால் மனைவிதான் என்று தீர்மானமாக அமைக்கப்பட்டுள்ளது.

கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டால்கூட அது மனரீதியான வன்முறையாகக் கருதப்படும். அதன்பேரில் மனைவி உடனே வழக்குத் தொடர்ந்து அந்தக் கணவனை அவனுக்குச் சொந்தமான தன் வீட்டிலிருந்தே வெளியேற்றலாம்! ஆமாம் ஐயா, இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. (திருமணம் இந்திய ஆண்களுக்கு ஒரு புதைமணலாக ஆகிவிட்டது!)

ஆனல் மனைவி எத்தகைய வன்முறையை செய்தாலும் - உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ - இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கணவனுக்கு எந்தவித பரிகாரமும் கிட்டாது. இது அநியாயமான சட்டமல்லவா?

பெண்கள் என்ன வன்முறையே செய்யாதா மெல்லியலாளர்களா?

இதோ இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

விழுப்புரம் : கள்ளத் தொடர்பை கண்டித்த கணவனை எரித்து கொலை செய்த மனைவிக்கு, விழுப்புரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(40). இவரது மனைவி சுலோச்சனா(32), கூலி வேலை செய்கிறார்.

களமருதூர் சதாசிவம்(48) மேஸ்திரியாக உள்ளார். சதாசிவத்திடம் சுலோச்சனா வேலை செய்த போது, இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை கண்டித்ததால், கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி ராஜேந்திரன் மீது சுலோச்சனா, சதாசிவம் சேர்ந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து சுலோச்சனா, சதாசிவத்தை கைது செய்து, விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சின்னப்பா, குற்றம் சாட்டப்பட்ட சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

~ டிசம்பர் 06,2008 - தினமலர்

தந்தையின் உறவே தெரியாமல் வளர்க்கப்பட்ட குழந்தை

திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-

“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.

விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."

சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-

"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன் தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.

முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"

எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்.

இப்போது அடுத்த முட்டாள் எவனாவது சிக்குவானா என்று பார்க்க தூண்டில் போடுகிறாள்.

என்ன, இந்த 38 வயது விளக்கில் விட்டில் பூச்சியாக விழ ஆசையா? சென்று பார்க்க இங்கே:
http://www.jeevansathi.com/profile/matrimonial-1014291W4.htm

ஆண்களின் உயிர் ஒரு செல்லாக்காசு

ஆம். இந்தியாவில், அதுவும் உச்ச நிதிமன்ற நீதிபதிகளின் கருத்தில்.

ஆந்திராவில் வெங்கடேஸ்வர ராவ் என்னும் கேந்திரீய வித்யாலயா ஆசிரியர் சாந்தி என்னும் பெண்ணை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மறுநாள் முதலிரவன்று அந்த மனைவி, தன் தாயார், மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து உறவினர் முன்னால் தன் கணவன் அழகாக இல்லை, தனக்குப் பொருத்தமானவன் இல்லை, மேலும் அவனுக்கு ஆண்மையில்லை என்று அவனை பலவிதமாகத் திட்டி அவமானப் படுத்தியிருக்கிறாள். அந்த அவமானம் பொறுக்க முடியாமல் அந்தக் கணவன் தற்கொலை செய்து மாண்டிருக்கிறான். அந்த சாந்தி தன் கனவனை தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளி என கீழ்க்கோர்ட்டில் தனடனை கொடுத்திருக்கிறார்கள். அதை எதிர்த்து பதிந்த மேல்முறையீட்டின் போது உச்சநீதி மன்ற நிதிபதி பசாயத் கூறியிருக்கும் தீர்ப்பு இது:

“அவலட்சணம், ஆண்மையில்லை என்பதெல்லாம் வெறும் கோபத்தில் சர்வ சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகள். அவையெல்லாம் ஒருவனை தற்கொலைக்குத் தூண்டும் என்று கருதமுடியாது.” இதைச் சொல்லி உச்ச நிதி மன்றம் அந்த மனைவி சாந்தி மேல் குற்றம் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டது.

(செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா)

ஆனால் இதேபோல் கணவன் திட்டி மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தால், உடனே எந்தவித தற்கொலை கடிதம் இல்லையென்றாலும் கணவன் தான் குற்றவாளி என்று ஆட்டோமேட்டிக்காக கைது செய்து, கோர்ட்டுகளும் திர்ப்பு சொல்லி தூக்கு தண்டனை விதித்து விடுவார்கள். இது 100% கேசுகளில் நிகழ்வது. பெண்கள் தற்கொலைக்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன. அவை திருமணத்தின்பின் 7 வருடங்களுக்குள் மனைவி இறந்தால் கணவன் தான் குற்றவாளி. இதற்கு சாட்சிகளே தேவையில்லை என்கின்றன.

ஒரு பெண் தன் கணவனை நீ அழகில்லை, உனக்கு ஆண்மையில்லை என்று சொன்னால், அதற்காக அவன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? அவள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுடன் கலவையில் ஈடுபட்டு தன் ஆண்மையை நிருபிக்க வேண்டாமா!

பயங்கரவாதிகளிடம் போரிட்டு குண்டடி பட்டு சாவதற்கு மட்டும் ஆண்மகன்தான் வேண்டுமோ. அங்கு செல்வதுதானே, இந்த புரட்சிப் பெண்கள்.

இந்த நாடு ஒரு வெட்கக்கேடான நாடு. இந்த நாட்டில் ஆண்மகனாகப் பிறந்து ஒரு இந்தியப் பெண்னை திருமணமும் செய்து கொள்பவன் ஒரு சாபக்கேடு பிடித்தவன். அவன் கட்டும் தாலியில் எழுதியிருக்கும் வாசகங்கள், “498A", "DV Act"என்பவைதான்.

வழக்கறிஞர் மற்றும் போலீசார் கருத்து

கணவர்களையும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த பெண்களையும் பொய் வழக்கு போட்டு கொடுமைப் படுத்தும் மனைவிகளைப் பற்றி வழக்கறிஞரும் காவல் துறையினரும் உண்மையை உடைத்துச் சொல்கிறார்கள் பாருங்கள்.

நன்றி: அவள் விகடன் (ஒரு பெண்களுக்கான வார இதழ்) - படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கி வாசியுங்கள்.