கள்ளக்காதலில் பிடிபட்டால் போடு 498A கேசு!

இது பிரமாதாதமான வழியாயிருக்கே! எந்தவிதக் கேள்வி முறையுமில்லாமல் பொய் வழக்கு போடுவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ள செக்ஷன் 498A மூலம் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் தொடுக்க இயலும் ஆயுதம் கையில் இருக்கும்போது பகிரங்கமாக கள்ளக் காதலில் மணமான பெண்கள் ஈடுபடலாம். பிடிபட்டவுடன் கேள்வி கேட்டால் "இந்தா பிடி 498A கேசு" என்று கேள்வி கெட்டவங்களை உள்ளே பிடித்துப் போட்டுவிடலாம். இதற்கென்றே ஸ்பெஷலிஸ்டு வக்கீல்கள்தான் இருக்கின்றனரே!

போதாததற்கு "கள்ளக் காதல் காவலர்" மனோரமா வேறு தற்போது புதிதாகத் தோன்றியுள்ளார். தவிர விஜயகாந்த் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார்.

பிறகென்ன, பெருகி வளரட்டும் கள்ளக் காதல்கள், பொய் வழக்குகள்!

ஆண்கள் திருமணத்தை நம்புவதை விடுத்து தங்கள் திருக்கரத்தை நம்பலாம்!

இப்போது செய்தி (தினத்தந்தி 30-09-2009)

நடத்தையில் சந்தேகம்
கார், வீட்டுமனை கேட்டு இளம்பெண் சித்ரவதை
கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் கைது

போளூர், செப்.30-

சேத்துப்பட்டு அருகே கார் மற்றும் வீட்டுமனை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நடத்தையில் சந்தேகம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முரு கேசன் (வயது63) ஓய்வுபெற்ற தலையாரி. இவரது மகன் சசிகுமார். தனியார் கல்லூரி பேராசிரியர்.

இவருக்கும், ஸ்ரீமதி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் நடத்தையில் சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கார், வீட்டுமனை

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று சசிகுமார் கூறியிருக்கிறார். இதனால் பஞ்சாயத்து பேசப் பட்டது. அப்போது குழந் தைக்கு மரபணு சோதனை நடத்தவேண்டும் என்று சசிகுமார் கூறியிருக்கிறார்.

பின்னர் ஸ்ரீமதியை அவரு டைய பெற்றோர் வீட்டுக்கு சென்று சென்னையில் ஒரு வீட்டுமனையும், ஒரு காரும் வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி உள்ளார். அதற்கு அவருடைய தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள் துணையாக இருந்துள்ளனர்.

3 பேர் கைது

இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், அவருடைய தந்தை முருகேசன், தாய் ராதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கேரளாவில் போலீசாக வேலைபார்க்கும் சசிகுமாரின் அண்ணன் ரவிந்சந்திரன், சென்னையில் ஆசிரியையாக பணிபுரியும்சகோதரி நளினி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவன் மனைவி பிரச்னையில் அயலாரைப் புகவிடாதே, பொய்க் கேசு போடாதே!


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் நடுப்பிடாகையை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் பெண் கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனவுடனேயே கண்னன் வீட்டார் அந்த கோபிகாவுக்கு சொத்து ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

கர்ப்பமான கோபிகா 15 நாட்களிலேயே கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு கண்ணனும் அவனுடைய பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மீது புகார் கொடுத்தார் (அதுதான் 498A செக்ஷன்).

அதன்மேல் குடும்ப வன்முறைச் சட்டத்தின்படியும் ஒரு புகார் கொடுத்தார்.

இத்தனை கேசுகள் போட்டதால் கண்ணன் அவரை வீட்டில் சேர்க்கவில்லை.

உடனே அந்த கோபிகா மார்க்சிஸ்டு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜயகாந்த் கட்சி போன்ற அரசியல் கட்சியினரைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு குழந்தையை கொளுத்தும் வெய்யிலில் போட்டு வாட்டி வதக்கி நடு ரோட்டில் போராட்டம் நடத்தினாள்.

கண்ணன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனே கோபிகாவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த அரசியவாதிகளும் பெரிய போராட்டத்தை அறிவித்து முதலமைச்சர் தலையிடவேண்டும் என்று கூக்குரலிட்டனர். காவல் துறை மீதும் புகார்களைக் கூறிவந்தனர். (ஆமாம் ஐயா, இத்தகைய அரசியவாதிகள் இளம் பெண்கள் பின்னால் போவார்கள், பணத்தின் பின்னே போவார்கள், ஓட்டின் பின்னே போவார்கள். பின்னே நியாயத்தின் பின்னேயா போவார்கள்?)

மேற்கணட விவரமெல்லாவற்றையும் அந்த கண்ணன் "கலைஞர் டிவி"யில் நேரிடையாக இரண்டு நாட்களுக்கு முன் கூறினார் - தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் சந்தேகம் உட்பட!

ஆனால் நேற்று காவல் துறை அதிகாரிகள் அந்த தம்பதிகள் இரண்டு பேரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சேர்ந்து வாழும்படி கூறி கண்ணனுடைய் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக் குடுத்தனம் போக அனுப்பியுள்ளனர்.

தினத்தந்தி செய்தியின்படி அந்த சேர்த்து வைக்கும் நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "கோபிகாவும் கண்ணனும் சேர்ந்து வாழ்வதற்கு அவர்களது குடும்பத்தினர்தான் தடையாக இருந்தனர். இதனால் அவர்களை தனிக்குடித்தனமாக சேர்ந்து வாழ அனுப்பி வைத்துள்ளோம்" என்றார். (http://www.dailythanthi.com/article.asp?NewsID=517199&disdate=9/29/2009)

இதுபற்றி நேற்றைய (29-09-2009) தினகரன் செய்தி இது:

அதிகாரிகள் சமரச முயற்சி வெற்றி 20 நாள் போராட்டம் முடிந்தது கணவரோடு சேர்ந்தார் கோபிகா.

நாகர்கோவில், செப்.29: குமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த கோபிகாவுக்கும் (23) ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரோடு தன்னை சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் கோபிகா பல போராட்டங்களை நடத்தினார்.

கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை கணவர் வீட்டு முன் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவளித்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரு தரப்பையும் பேச்சு வார்த்தைக்கு வரும்படி எஸ்.பி. சண்முகவேல் அழைத்தார். அதன்படி கோபிகா மற்றும் கண்ணன் தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு வந்தனர். குடும்ப பிரச்னை என்பதால் கோபிகா, கண்ணனை தவிர வேறு யாரும் உள்ளே வர வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். சரியாக 11 மணி அளவில் எஸ்.பி. அலுவலகத்துக்குள் கண்ணனும், கோபிகாவும் சென்றனர். எஸ்.பி. சண்முகவேல், பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேல் ஆகியோர் அவர்களிடம் பேசினர்.

இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொடக்கத்தில் பேசினர். நேரம் செல்ல, செல்ல பேச்சு வார்த்தையில் மாறுதல் ஏற்பட்டது. கணவருக்காக கோபிகாவும், கோபிகாவுக்காக கண்ணனும் பரிந்து பேசும் அளவுக்கு நிலை வந்தது. 3 மணி நேர பேச்சுக்கு பிறகு இருவரும் சிரித்தபடியே வெளியே வந்தனர்.

இது தொடர்பாக எஸ்.பி. சண்முகவேல் கூறியது:

கோபிகா, கண்ணன் இருவரும் சேர்ந்து விட்டனர். குடும்ப விவகாரத்தை இப்படி பெரிதாக்க கூடாது. விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்சினை கூடாது என்று பல அறிவுரைகளை கூறினோம். குழந்தையின் நலனையும் பார்க்க வேண்டும் என்றோம். இந்த பேச்சு வார்த்தையில் பலனாக இருவரும் தங்களது தவறை உணர்ந்தனர். அவர்கள் இனி தங்கள் குழந்தையோடு புது வாழ்க்கையை தொடங்க போகிறார்கள் என்றார்.

வெளியே வந்த கோபிகா, ‘கணவரோடு சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கண்ணன் கூறுகையில், ‘ஒரு சிலரின் தூண்டுதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம்’ என்றார்.

லேட்டஸ்ட் கள்ளக்காதல் கொலை

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலத்தில், "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்ததாக' செல்வி தெரிவித்துள்ளார். அதே போல சக்திவேலுவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்:

சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

==============

கள்ளக்காதல் கொலைக்கு வக்காலத்து வாங்கும் ஆச்சி மனோரமாவும், கள்ளக் காதல் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டு பிறகு கணவன் மீது 498A, DVAct போன்ற வழக்குகளைப் போட்டு ரவுசு பண்ணும் பெண்ணைத் தூண்டி விட்டு பாலிடிக்ஸ் செய்யும் விஜயகாந்த் போன்றவர்களும் தங்கள் குறுகிய சுயநலனுக்காக முனைந்து நின்று நம் நாட்டில் திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலன், பண்பாடு போன்ற அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கள்ளக்காதல் கொலை ஸ்பெஷல்

வார இறுதியில் வலைப்பதிவு வாசகர்களாகிய உங்களுக்கும், அரசியல் குட்டையைக் குழப்பி அதிலிருந்து எப்படி மீன் பிடிப்பது என்று விளங்காமல் இன்னும் மேன்மேலும் குழம்பிக் கொண்டிருக்கும் "கேப்டன்" [*] மற்றும் இப்போது அந்தக் குட்டையில் இறங்கத் துடித்துக் கொண்டு வாயில் வந்ததை பினாத்திக் கொண்டிருக்கும் மனோரமா ("ஆச்சி" இல்லை, இல்லை "மறத்தி"!) போன்றோருக்கும் சில கள்ளக் காதல் + கொலை செய்திகளை சமர்ப்பிக்கிறோம்! (கொஞ்சம் பழசு, அட்ஜஸ்ட் பண்ணிக் கோங்க!)

[*](அதென்ன கேப்டன்? எந்த ராணுவத்தில் கேப்டனாக இருந்தார்? அல்லது எந்தக் கப்பலில்? அல்லது சின்ன வயதில் தீபாவளியன்று "கேப்" மட்டும் வெடிப்பதில் எக்ஸ்பர்ட் என்பதால் "கேப்டன்" என்ற பட்டம் கிட்டியிருக்குமோ? எப்படியோ போகட்டும்; நமக்கு வேலையிருக்கிறது. இதை எழுதி முடிப்பதற்குள் இன்னும் இரண்டு பெண்குலத் திலகங்கள் தங்கள் கள்ளக் காதலர்களுடன் கூட்டுச் சேர்ந்து தன் பெற்றோரையும் பெற்ற குழந்தைகளையும் கொலை செய்து ஏரக் கட்டியிருப்பார்கள்!)

க.கா+கொ - 1

மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த மகளைக் கொன்று விட்டு, அந்தப் பழியை கணவர் மீது போட்டு சிறையில் தள்ளி விட்டு, மருமகனுடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரையை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்த பரபரப்பு விவரம்...

மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். 65 வயதாகும் இவரை பாம்பே பரமசிவம் என்றுதான் அழைப்பார்கள். மும்பையில் பல காலம் வசித்து வந்த பரமசிவம், மும்பை தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராகவும் இருந்துள்ளார்.

பின்னர் மதுரை திரும்பிய பரமசிவம் ஹோட்டல்களை வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கம்மாள். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மகள் உள்ளார்.

முதல் மனைவி இறந்த பின்னர் மேலூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (50) என்ற பெண்ணை 2வது கல்யாணம் செய்து கொண்டார். பாக்கியலட்சுமி, பரமசிவத்திற்கு உறவுக்காரப் பெண் ஆவார்.

பாக்கியலட்சுமிக்கு வரலட்சுமி, மீனா என இரு மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர்.

வரலட்சுமியை, காண்டிராக்டரான ராஜமாணிக்கம் (இவருக்கு வயது 38) என்பவரைக் கல்யாணம் செய்து வைத்தனர். பிரசவத்தின்போது வரலட்சுமி எதிர்பாராதவிதமாக இறந்து போனார்.

இதனால் ராஜமாணிக்கம் மனைவியை இழந்து வாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சென்று அவ்வப்போது ஆறுதல் கூறுவாராம் பாக்கியலட்சுமி. ஆறுதல் கூறப் போன அவருக்கும், மருமகனுக்கும் இடையே தகாத தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கள்ளக்காதலில் வீழ்ந்தனர்.

இந்த உறவு இருவருக்கும் பிடித்துப் போக இப்படியே இருந்து விடலாம் என தீர்மானித்தனர். இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் மறுபடியும் எனது வீட்டுக்கே மருமகனாக வர வேண்டும் என்று கூறிய பாக்கியலட்சுமி, தனது 2வது மகள் மீனாவை, கல்யாணம் செய்து வைப்பதாக ராஜமாணிக்கத்திற்கு உறுதியளித்தார்.

பின்னர் தனது கணவரிடம் பேசி அவரது சம்மதத்தைப் பெற்று மீனாவை, ராஜமாணிக்கத்திற்கு 2வது திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் எந்தவிதத் தடையும் இல்லாமல் பாக்கியலட்சுமி, ராஜமாணிக்கம் கள்ளத் தொடர்பு தொடர்ந்தது.

தனது கணவருக்கு மும்பையில் உள்ள சொத்துக்களை அப்படியே அபகரிப்பதற்காக, அவரது முதல் தாரத்து மகளான ஜெயலட்சுமியை, தனது தம்பிக்கே கட்டி வைத்துள்ளார் பாக்கியலட்சுமி.

அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்துள்ளனர். மீனா மூலமாக தனது மாமியாருடன் நெருங்கி விட்ட ராஜமாணிக்கம், தங்கு தடையில்லாமல் இந்த முறையற்ற காம லீலையில் ஈடுபட்டு வந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்பார்களாம். அடிக்கடி கோவிலுக்குப் போவது, விசேஷங்களுக்குப் போவதாக கூறி விட்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளனர்.

ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ராஜமாணிக்கமும், பாக்கியலட்சுமியும் ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது மீனா அங்கு வந்து விட்டார். தனது தாயும், கணவரும் இருந்த கோலத்தைப் பார்த்து அவருக்கு இதயமே வெடித்து விட்டது போலாகி விட்டது.

இப்படி அசிங்கமாக நடந்து கொண்டு விட்டீர்களே என்று தாயிடமும், கணவரிடமும் கண்ணீர் வீட்டுக் கதறியுள்ளார். ஆனால் இருவருமே அதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.

மகள் பார்த்து விட்டாளே என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் மருமகனுடனான கள்ளத் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார் பாக்கியலட்சுமி. ராஜமாணிக்கமும் மனைவியைக் கண்டுகொள்ளாமல் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தாயுடனான கள்ளக் காதலை விடுமாறு கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார் மீனா. ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பரமசிவம் வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். பாக்கியலட்சுமி வெளியில் போயிருந்தார். மாமியாருடனான சந்தோஷ உறவுக்கு இடையூறாக இருக்கிறாளே என்று ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மீனாவின் கழுத்தை சேலையால் நெரித்துள்ளார்.

அந்த சமயத்தில் பாக்கியலட்சுமி வீட்டுக்கு வந்தார். மகளின் கழுத்தை மருமகன் நெரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், மருமகனுடன் சேர்ந்து மகளைக் கொலை செய்தார். பின்னர் இருவரும் மீனாவை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது போல செட் செய்து விட்டு வீட்டுக் கதவை வெளியில் பூட்டினர்.

பிறகு வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தது போல காட்டிக் கொண்டு மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுது நாடகமாடினர். சப்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பரமசிவத்தைப் பார்த்து, மகளிடம் மோசமாக நடந்து கொள்ள� முயன்றார், ஆனால் மீனா மறுக்கவே அவளைக் கொலை செய்து விட்டதாக அசிங்கமான புகாரை தனது கணவர் மீது சுமத்தினார் பாக்கியலட்சுமி.

இதையடுத்து போலீஸார் அப்பாவியான பரமசிவத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைக்குப் போன பிறகுதான் தனது மனைவி மற்றும் மருமகனின் மோசமான நடத்தை பரமசிவத்திற்குத் தெரிய வந்தது.

மகளைக் கொன்று விட்டு, கணவரையும் சிறைக்கு அனுப்பி விட்ட சந்ேதாஷத்தில் இருந்த பாக்கியலட்சுமி, மருமகனுடன் முன்பை விட படு தீவிரமாக உல்லாசம் அனுபவித்தார். அது மட்டுமல்லாமல் அவருடன் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் ஊராக போய் ஜாலியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மருமகனின் நடத்தை குறித்து போலீஸில் விரிவாக சொல்லி இருவரையும் கைது செய்ய வைக்க பரமசிவம் சிறையில் இருந்தபடியே நடவடிக்கை மேற்கொண்டார்.

இது ராஜமாணிக்கத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து வழக்கை திசை திருப்புதவற்காக மீனா வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் ராஜமாணிக்கம், பாக்கியலட்சுமியின் குட்டு வெளிப்பட்டது. இருவரின் கள்ளக்காதலும் வெளி வந்தது.

இதையடுத்து வாடிப்பட்டியில் பாக்கியலட்சுமியை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். ராஜமாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.

அவர் தற்போது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதி ராஜசூர்யா முன்பு விசாரணைக்கு வந்தது.

தனது மனுவில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நானும், எனது மாமியாரும் சேர்ந்து மீனாவைக் கொன்றதாக சிபிசிஐடி போலீஸார் செய்தி பரப்பியுள்ளனர். இது கிரிமினல் அவமதிப்புச் செயலாகும்.

எனவே சிபிசிஐடி போலீஸ் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வாதத்தை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, சிபிசிஐடி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்கினார். மேலும், இந்த வழக்கு தொடரப்பட்டால், அன்றைய தினமே முன்ஜாமீன் மீதான மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

செய்தி - தட்ஸ்தமிழ்.

---------------

க.கா+கொ - 2

கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலனான தனது வீட்டு டிரைவருடன் தப்பியோடிய பெண் காதனுடன் தற்கொலை செய்து கொண்டார்.




குற்றாலம் வைரம் நகரில் உள்ள லாட்ஜில் நேற்று காலை கணவன்-மனைவி என்ற பெயரில் ஒரு தம்பதி அறை எடுத்தது. அவர்கள் தங்கியிருந்த கதவு இரவு 11 மணி வரை திறக்கப்படாததால் ஜன்னல் கதவை விடுதி ஊழியர்கள் திறந்து பார்த்தனர்.

அப்போது அந்த ஆணும் பெண்ணும் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டது திண்டிவனத்தைச் சேர்ந்த கள்ளக் காதல் ஜோடி தாமோதரன் என்ற சண்முகநாதன் (32) மற்றும் வைதேகி (35) என தெரியவந்தது.

இந்த வைதேகி பெண் போலீஸாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான வழக்கறிஞர் நடராஜன் என்பவரது மனைவி ஆவார். இருவரும் காதல் திருமணம் முடித்தவர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந் நிலையில் தான் தனது வீட்டு கார் டிரைவரான தாமோதரனுடன் வைதேகிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கள்ளக் காதலை நடராஜன் கண்டித்ததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந் நிலையில் போலீஸ் வேலையை வைதேகி ராஜினாமா செய்துள்ளார். தாமோதரனும் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.

ஆனாலும் நடராஜன் வெளியே சென்றுவிடும்போதெல்லாம் தாமோதரன் வைதேகி வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதை அறிந்த நடராஜன் வைதேகியை கண்டிக்கவே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த 3ம் தேதி நடராஜன் தனது படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்து வைதேகியும், தாமோதரனும் தலைமறைவாயினர். இதனால் நடராஜனை மனைவியும் கள்ளக் காதலனும் தான் கொலை செய்திருக்க வேண்டும் எனக் கருதிய போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தான் இந்த கள்ளக் காதல் ஜோடி ஒவ்வொரு ஊராக சுற்றிவிட்டு கடைசியாக குற்றாலத்துக்கு வந்து லாட்ஜில் தங்கியுள்ளனர். எப்படியும் போலீசாரிடம் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் தூக்கு போட்டுக் கொண்ட அறையில் இருந்து வைதேகி எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், எங்கள் தற்கொலைக்கு யார் தூண்டுதலும் காரணம் இல்லை. எங்கள் படத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது திண்டிவனம் வீட்டு போன் நம்பர் மற்றும் திண்டிவனம் காவல் நிலைய எண்ணையும் எழுதி வைத்துள்ளார்.

செய்தி - தட்ஸ்தமிழ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏயின் தம்பியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது. பரபரப்பு வாக்குமூலம்

விளாத்திகுளம், செப்.25- 2009. செய்தி - தினத்தந்தி, தினமலர்

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சங்கரராமு மகன் குட்டி என்ற ராஜராஜன் (வயது 40). விவசாயி.

இவருக்கு கிருஷ்ணகுமாரி (36) என்ற மனைவியும், கோகுல் (13) என்ற மகனும், ரம்யா (8) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.


ராஜராஜனின் அண்ணன் குமரகுருபர ராமநாதன் விளாத்திகுளம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். இவர் தற்போது ம.தி.மு.க. மாவட்ட பொருளாளராக உள்ளார். ராஜராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜராஜன் கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷாஜகான் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அரியநாயகிபுரம். எனக்கு திருமணம் ஆகவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களது வீட்டின் பக்கத்திலேயே ராஜராஜனின் வீடு உள்ளது. எனவே அவரிடம் பழக்கம் இருந்ததால் அவரது வீட்டிற்கு சென்று அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.

கடந்த 2 மாதங்களாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் என்னை யாரும் சந்தேகப்படவில்லை. நான் சென்னையில் ஒரு பழைய இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வேன்.

கடந்த மாதம் நான் சென்னையில் இருந்தபோது கிருஷ்ணகுமாரி, செல்போனில் என்னிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்தநிலையில் கடந்த வாரம் நான் ரம்ஜான் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து இருந்தேன்.

அப்போது, தனது கணவரை கொலை செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கிருஷ்ணகுமாரி என்னிடம் கூறினார். இதனால் ரம்ஜான் பண்டிகை அன்று நான், ராஜராஜன் மற்றும் எனது நண்பர்கள் அலியாஸ், ராஜேந்திரன், காளிமுத்து, வேல்சாமி, முருகேசன் ஆகியோர் அரியநாயகிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தினோம். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தோம்.

அப்போது மற்றவர்களை அனுப்பிவிட்டு ராஜராஜனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் 2 பேரும் மது அருந்தினோம். இதனால் ராஜராஜன் அதிக போதையில் இருந்தார்.

அப்போது நான் அருகில் கிடந்த உருட்டைக்கட்டையால் ராஜராஜன் கழுத்தில் அடித்தேன். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே செத்தார்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை தனியாக கழற்றிக்கொண்டு வந்து கிருஷ்ணகுமாரியிடம், செல்போனையும், சிம்கார்டையும் கொடுத்துவிட்டு ராஜராஜனை கொலை செய்ததை கூறினேன். பிறகு கிருஷ்ணகுமாரியிடம் என்னுடைய ரத்தக்கறை படிந்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ராஜராஜனை நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு ஷாஜகான் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

இதையொட்டி கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாஜகான் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரியின் தற்போதுள்ள போட்டோ மற்றும் சின்ன வயதில் எடுத்த போட்டோக்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணகுமாரியிடம் இருந்து ராஜராஜனின் செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், "உரிய முறையில்' விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.
===========
மனோரமா, ஆச்சி,
உங்க இயக்கம் என்ன ஆச்சீ?

சினேகாவின் பொய்யால் அப்பாவிக்கு தர்ம அடி

திருச்சியில் மனைவியுடன் நகை வாங்க வந்த ஒரு ஆணை அவர் தன் இடுப்பைக கிள்ளியதாக பொய் சொல்லி சுட்டிக் காட்டினார் நடிகை சினேகா. நடிகை சொன்னால் போதாதா! உடனே அந்தக் கடைச் சிப்பந்திகள் அந்த ஆள்மீது கண்டபடி தர்ம அடி போட்டனர்.

Sharmila இது பற்றி அந்த நபரின் மனைவி ஷர்மிளா கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கடை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா கூறுகையில்,

நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

திடீரென, "புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்" என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், என் கணவர் சட்டை கிழந்தது. "தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்" என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர்.

"இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?' என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன்.

நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார், என்றார்.

இது பற்றி தினமலர் வெளியுட்டுள்ள செய்தியின் முந்தைய பகுதி இது:-

நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்த விவகாரத்தில் பரபரப்பான லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி சின்னக்கடைவீதியில் உள்ள நகைக்கடையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சினேகா திருச்சி சென்றிருந்தார். நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட சினேகாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டிருந்தார்கள். விழா முடிந்ததும் கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றார். இதையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை கடை ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து கடைக்கு இழுத்து வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுரேஷ்குமார் (34) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாரையும், தங்களை ஒருமையில் திட்டிய பாதுகாப்பு பணியாளர்களையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் சமாதானப்படுத்தியதால் (அது எந்தவித "சமாதானமாக இருக்கும் என்பதை நீங்கள் சுலபமாக யூகித்துக் கொள்ளலாம்!) அவர்களை விட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.

இதே செய்தியை தினத்தந்தி சிறிது நடுநிலையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

திருச்சி, செப்.25- 2009

திருச்சியில் நடிகை சினேகாவிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை அடித்து உதைத்த நகைகடை காவலாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் நேற்று நடந்த விழாவில் பிரபல நடிகை சினேகா கலந்து கொண்டார். நடிகை சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா நிருபர்களிடம் கூறியதாவது:-

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்.
==============================

சினிமா நடிகைகளுக்கு ஏன் இவ்வளவு மவுசு! அவர்கள் தளுக்கி, மினுக்கி, இல்லாததை இருப்பதாக பொய்த் தோற்றங்களைக் காட்டினால்தான் அவர்களின் பிழைப்பு ஓடும். அவர்களில் பலர் மேக்கப் இல்லாமல் பார்த்தால் பயங்கரமாக இருப்பார்கள்.

அது தவிர, ஒரு பெண் "ஐயோ, என்னைக் கிள்கிறானே", "என் மேல் இடித்து விட்டானே" அல்லது "என்னைக் கையைப் பிடித்து இழுத்து விட்டானே" என்று பொது இடங்களில் கூச்சல் போட்டால் போதும், உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் நம் ஜொள்ளு கேசுகள். என்ன ஏது என்று விசாரிக்காமல் தர்ம அடி கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஏன் தான் இப்படி அலைகிறார்களோ!

[படம்: நன்றி - தினத்தந்தி]

40 வயதுக்காரிக்கு 20 வயது கள்ளக்காதலன்!

கள்ளக்காதல் படுத்தும் பாடு!

20 வயது லாரி கிளீனருடன் ஓடிய 40 வயது பெண் கவுன்சிலர்
"கணவர் வேண்டாம்... காதலனே போதும்'' என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்

பெங்களூர், செப்.24- 2009. தினத்தந்தி

கணவர், குழந்தைகளை விட்டு விட்டு கிராம பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் ஒருவர், தன்னை விட 20 வயது குறைந்த லாரி கிளீனரான தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சனிவார சந்தே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் மஞ்சுளா (வயது 40). இவருக்கும், ரவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 10 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சுளா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ரவியும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வாலிபருடன் ஓட்டம்

இதற்கிடையே, மஞ்சுளாவுக்கும், 20 வயதான லாரி கிளீனர் சீனிவாஸ் என்ற வாலிபருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்தது. மஞ்சுளா தனது இளம் காதலர் சீனிவாசுடன் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.

சீனிவாஸ் லாரி உரிமையாளரின் பணத்தை திருடிக்கொண்டு அந்த பணத்தில் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு வந்தார். இங்கு அவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கிக் கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

ஓட்டலில் தங்கினர்

பின்னர் கள்ளக்காதல் ஜோடி பெங்களூரில் இருந்து குஷால் நகருக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

இதற்கிடையே, லாரி உரிமையாளர் தனது பணத்தை திருடிச் சென்ற சீனிவாசை பற்றி விசாரித்தார். அப்போது சீனிவாஸ், மஞ்சுளாவுடன் உல்லாசமாக சுற்றித்திரிவது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பிடிபட்டனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது உறவினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் குஷால் நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கு சீனிவாசுடன் தங்கி இருந்த மஞ்சுளாவை மடக்கி பிடித்தார்.

மஞ்சுளாவை கணவர் ரவியுடன் சேர்ந்து வாழும்படி பெரியவர்கள் அறிவுரை கூறினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஞ்சுளா தனது நிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை. வாழ்ந்தால் சீனிவாசுடனே வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். குழந்தைகளை என்னுடன் அனுப்ப வேண்டாம், நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டார்.

கணவருடன் வாழ பிடிக்கவில்லை

இதையடுத்து, மஞ்சுளாவையும், சீனிவாசையும் அவர்கள் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் மஞ்சுளாவிடம் பேசினர். ஆனாலும், அதிலும் மஞ்சுளா மசியவில்லை. தனது இளம் காதலருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார்.

`எனக்கு கணவர் ரவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை. நான் எனது காதலர் சீனிவாசுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மஞ்சுளா, அவரது இளம் காதலர் சீனிவாசுடன் அங்கிருந்து சென்றார். அவரது கணவர் ரவி தனது 2 குழந்தைகளுடன் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார்

===============

இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவன்மீது ஆயிரக் கணக்கான கேசுகளைப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள். மேலும் அந்தப் பெண்குலத் திலகம் அவன்மீது ஜீவனாம்சக் கேசு போடுவாள். உடனே நம் நீதிபதிகள், "அவள் பாவம், கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் பணம் வேண்டாமா, நீ உன் கிட்னியை விற்றாவது ஜீவனாம்சம் கொடுக்கத்தான் வேண்டும்" என்று தீர்ப்பு அளிப்பார்.

தேவையா இந்தத் திருமணங்கள்!

பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த தாய்!

இந்தியாவின் நீதிமன்றங்களில் வரும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் காப்புப் பொறுப்பு தாயின் வசம்தான் முழுமையாக ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவுதான் தந்தை தன் குழந்தைகளின் மீது பாசம் வைத்திருந்தாலும், அவர்களின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகமும் செய்பவனாக இருந்தாலும், அதே நேரத்தில் அந்தத் தாய் குழந்தைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாதவளாக, "தான், தன் சுகம்" என்று இருப்பவளாக இருந்தாலும், இந்திய நீதிமன்றங்கள் குழந்தைகளை தந்தைகள் வசம் ஒப்படைப்பதில்லை.

தந்தை என்பவர் வெறும் "விசிட்டர்" என்பது நீதிமன்றங்களின் முடிபு. ஆனால் நடைமுறையில் அந்த "விசிட்டுகள்" கூட அந்தத் தந்தைகளுக்குக் கிட்டுவதில்லை. ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி தந்தையர்களிடம் குழந்தைகளைக் காண்பிக்காமல் ஏமாற்றும் தாய்க்குலங்கள் அநேகம். அந்தக் கணவன் பிறகு கோர்ட்டுக்கு நடையாய் நடந்து "எனக்கு குழந்தையைக் காண்பியுங்கள்" என்று போராட வேண்டும்!

ஆனால் இதில் முரண்நகை என்னவென்றால், குழந்தைகளைக் கண்னால் காண்பதற்குக் கூட வாய்ப்புக் கிட்டுகிறதோ இல்லையோ, அந்த மாஜி மனைவியின் சிலவுக்கும் குழந்தைகளின் பராமரிப்புச் சிலவுக்கும் மாதா மாதம் அந்த கணவன் தான் பணம் கொடுத்து அழவேண்டும்! இல்லாவிட்டால் சிறை தண்டனை!!

இத்தகைய ஒருதலைச் சார்பான, ஆணுக்கு எதிரான, சட்டங்கள், தீர்ப்புகள் மலிந்தது இந்த நாடு.

சரி, இந்த நாட்டில் பிறந்த ஒரு தாயார் தன் குழந்தைகளை என்ன செய்தார், விவாக ரத்து பெற்ற தன் கணவன் மீது கொண்ட வெறுப்பால் தன் குழந்தைகள அவள் எப்படிக் கொன்றாள் என்பதை வாசியுங்கள்:-

2 மகள்களை கொன்ற இந்திய பெண். 33 ஆண்டு சிறைத் தண்டனை.

லண்டன், செப்.23- 2009

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் நகரில் வசிக்கும் இந்தியப்பெண் ரேகா குமாரி பேக்கர். 41 வயதான இவர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தார். அவருக்கு டவீனா பேக்கர், ஜாஸ்மின் பேக்கர் என்று 2 மகள்கள் இருந்தனர். டவீனாவுக்கு வயது 16. இளையவளுக்கு வயது 13. இருவரையும் கடந்த 2007-ம் ஆண்டு ஜுன் மாதம் 13-ந்தேதி அவர்களது தாயார் கத்தியால் குத்தி கொன்றார். 39 முறை கத்தியால் குத்தினார்.

இரு பெண் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் உயிர் பிரிந்த பின்னும் மேன்மேலும் கத்தியால் குத்திக் கொண்டெ இருந்திருக்கிறார்.
மகள்களை யார் கவனித்துக்கொள்வது என்பது தொடர்பாக அவருக்கும், அவரது முன்னாள் கணவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தான் அவர் கொலை செய்தார்.

Indian Express reports:

Kumari-Baker’s ex-husband, businessman David Baker, said “not a day passes” when he does not think of Davina and Jasmine. “I was robbed of my daughters by an act of calculated viciousness,” he said.

Times Of India reports:

The elder daughter Davina Baker, 16, was stabbed 39 times while her sister Jasmine Baker, 13, was attacked 29 times with a kitchen knife in a frenzied attack by their mother in 2007.

அந்த ரேகா குமாரி என்னும் பெண் பேயின் திருமுகத்தைக் கண்டு "ஆகா, இவளல்லவா, பெண்குலத்திலகம்" என்று துதிபாடத் துடிப்போருக்காக அந்தப் பெண்ணின் படத்தை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மனோரமா ஆச்சி, எங்கே இருக்கீங்க? அந்த புதுமைத் தாய் தன் இளம் பெண் குழந்தைகளை 39 முறை கத்தியால் குத்தியதற்கும் அவளுடைய கணவனின் ஆண்மையின்மை தான் காரணமா? "தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்ல உரிமை வேண்டும்" என்பதற்காக எப்போது போராட்டம் தொடங்கப் போகிறீர்கள்?

ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக் கிட்டாளாம் தாப்பா

அனைத்துப் பழியும் ஆண்மேலே!

ஐயா, ஆண்பிள்ளைகளே, சின்னப் பொண்ணு கண்ணடிச்சுக் கூப்பிடறா, மிஸ்டு கால் கொடுக்கிறான்னு, வாயைப் பொளந்துக்கிட்டு பின்னாலயே ஒடாதீங்கப்பா. உல்லாசம் ரெண்டு பேருக்கும்தான் என்றாலும், பழி முழுவதும் உங்கள் மேல்தான் விழும். அவ போயிடுவா, இன்னொருத்தனைப் பாக்க; நீங்க போகணும் மாமனார் வீட்டுக்கு, கம்பி எண்ண! (எதுக்கும் Birth Certficate வங்கிப் பார்த்துக்கிடறது நல்லது!)

இப்ப, இன்றைய நியூஸ்!

ஆசைவார்த்தைகள் கூறி16 வயது பெண்ணை கடத்தி கோவிலில் திருமணம். மருத்துவ பிரதிநிதி கைது

திருச்சி, செப்.22- 2009. செய்தி - தினத்தந்தி

திருச்சி கோட்டை பகுதியில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது பெண்ணை கடத்திச் சென்று (பார்த்தீங்களா, அவளுக்கு ஆசையே இல்லையாம். இவன் தான் "ஆசை வார்த்தை" கூறி "கடத்திச் சென்றானாம்". என்னங்கடா இது. கபடு சூது இல்லாம சோரம் போயிட்டேங்கிற மாதிரி இல்ல இருக்கு இது!) கோவிலில் வைத்து திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

16 வயது பெண்

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள அலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 16) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (இவர் பெயரை மாற்ற மாட்டார்கள். ஏனென்றால் இவன் ஆண். பெண்ணுடைய பெயர்தான் வெளியே தெரியக்கூடாது. ஆண் எக்கேடு கெட்டுப் போனால் என்ன!. இதில கூட ஓரவஞ்சனை பாருங்கப்பா!) (வயது 23). மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

கோபிநாத்தும், பிரியாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் கோபிநாத், பிரியாவை காதலிப்பதாகவும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார். (யார் யாரிடம் "ஆசை வார்த்தைகள் கூறினார்கள், யார் யாரை மயக்கினார்கள் என்ப்தை அந்த ஆணிடம் கேட்டல்தானே தெரியும். ஆனால் அவன் தான் குற்றவாளியாயிற்றே!)

கோவிலில் திருமணம்

கோபிநாத்தின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய பிரியா, கோபிநாத்தை காதலிக்க தொடங்கினார். இந்த நிலையில் பிரியா திடீரென்று வீட்டை விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பிரியாவை பல இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை எங்கும் காணவில்லை.
அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் பிரியாவை, கோபிநாத் கடத்தி சென்று கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் இது குறித்து கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

கைது

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வளர்மதி இருவரும் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இருவரும் திருச்சி சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மகளிர் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர்.

கோபிநாத்தை கைது செய்து அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரியாவுக்கு மகளிர் போலீசார் அறிவுரைகள் கூறி அவரை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி

புதுடில்லி: செப்டம்பர் 20,2009

"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.

குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரைக் கொன்ற இளம் பெண்!

ஆகா, இந்திய இளம் பெண்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டனர். அவர்களின் ஆசைகளுக்குக் குறுக்கே யார் வந்தாலும் கொலைதான்! அது கணவனாயிருந்தலும், மாமியார், மாமனாராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் சரி.

ஏனிந்த நிலை? அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்ப்பவர்கள் யார்? இந்த சமூகத்திலுள்ள "ரவிக்" + "பாப்" தலைப் பெண்ணியத் தலைவிகளா? நம் பண்பாட்டு விழுமியங்களைத் தகர்த்து, அதுதான் பெண் விடுதலை என்னும் தொடர் போதனைகளா?

இத்தகைய பெண்ணியவாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இயற்றப் பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில், திருமணமான இளம் பெண்கள் தங்கள் கணவன்மார்களையும் அவர்தம் பெற்றோரையும் உற்றோரையும் தங்கள் வீட்டை விட்டே விரட்டலாம். அவர்கள் மீது மனம் போனபடி பொய் கிரிமினல் வழக்கு தொடுத்து கைது செய்விக்கலாம். ஆனால் என்ன பொய் சொன்னாலும் அந்த இளம் பெண்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது.

அத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களைக் கையிலெடுத்து இந்தியாவில் இதுவரை 1,40,000 வயதான தாய்மார்களும், கண்வன்மார்களின் சகோதரிகளும், சிறு பெண் குழந்தைகளும் கைது செய்து சிறையிலடத்திருக்கிறார்கள்.

இந்த சீரழிவின் அடிப்படைக் காரணி என்ன? இளம் பெண்கள் மனத்தில் விஷ வித்தை விதைத்து, "உங்கள் இஷ்டம் போல் இருங்கள், சிலவு செய்யுங்கள். யாரோடு வெண்டுமானாலும் குலாவிக்கொண்டு உல்லாசமாக இருங்கள். எவர் குறுக்கே வந்தாலும் புறந்தள்ளுங்கள். ஏனெனில் பெண்கள் தன்னிச்சைப்படி வாழ்வதை இந்தப் பழமைவாதிகள் 'பண்பாடு, கலாச்சாரம், கற்பு' என்னும் பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கொண்டு அடக்கி வந்திருக்கிறார்கள். இனிமேல் அதற்கு இடம் கொடுக்க்காதீர்கள்" என்ற மனப்பான்மையை திட்டம் போட்டு வளர்த்து வருகின்றனர் பல பெண்ணியவாதிகளும், சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலாவி வரும் வயடானவர்களும். இத்தகைய தவறான போக்குக்கு அரசு இயந்திரமும், சட்டங்களும், தீதிமன்றங்களும், ஊடகங்களும் துணை போகின்றன என்பதுதான் விசனப்பட வேண்டிய விஷயம்.

இதன்கீழ் வரும் செய்தியைப் படித்துவிட்டு அதற்கு மனோரமா அம்மையார் என்ன பதில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அதே நேரத்தில் "குடும்ப வன்முறை என்பது பெண்கள் செய்யவே மாட்டார்கள். ஆண்தான் செய்வான்" [*] என்று சட்டம் இயற்றியிருக்கும் செயலைக் கண்டித்து ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள்.

---------------------
[*] The Protection Of Women From Domestic Violence Act, 2005, Section 3

2. Definitions.-In this Act, unless the context otherwise requires,-
(a) "aggrieved person" means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;


(q) "respondent" means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;
-----------------------------------------
நம் சமுதாயம் ஒரு எரிமலை வாயின்மேல் அமர்ந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

இப்போது செய்தி:

ரோதக் (ஹரியாணா), செப்.21, 2009. செய்தி - தினத்தந்தி.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரை விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக 19 வயது இளம் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

அரியானாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள கபூல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சோனம் (வயது 19). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அவர்களுடைய காதலுக்கு, சோனத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாப்பாட்டில் விஷம்

ஆனால் காதல், சோனத்தின் கண்களை மறைத்தது. குடும்பத்தில் உள்ளவர்களை தீர்த்துக் கட்டினால்தான் தனது காதல் நிறைவேறும் என்று கருதிய அவர், அதற்கான காரியத்தில் துணிச்சலுடன் இறங்கினார். விஷம் கொடுத்து எல்லோரையும் கொல்ல தீர்மானித்த சோனம், தனது காதலன் நவீனிடம் சொல்லி விஷத்தை வாங்கி வரச் செய்தார். பின்னர் அந்த விஷத்தை இரவில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் கலந்தார்.
அதை சாப்பிட்ட சோனத்தின் தந்தை சுரேந்தர், தாயார் புரோமில்லா, பாட்டி போரி, சகோதரர் அர்விந்த் மற்றும் விஷால், சோனிகா, மோனிகா என்ற 3 குழந்தைகள் ஆகிய 7 பேர் சிறிது நேரத்தில் படுக்கையில் மயங்கி விழுந்தனர்.

பரிதாப சாவு

உடனே சோனம் தனது காதலன் நவீனை வீட்டுக்கு வரவழைத்தார். மயக்கத்தில் கிடப்பவர்கள் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயந்த இருவரும், அவர்களுடைய கழுத்தை நெரித்தனர். இதனால் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஒரே வீட்டில் 7 பேர் இறந்து கிடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சோனம் வீட்டின் குளியல் அறையில் லேசாக மயங்கிய நிலையில் கிடந்தார்.

பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.

இதனால், மயங்கிய நிலையில் கிடந்த சோனத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்திய போது, 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும், தான் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சோனம் மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தானும் பாதிக்கப்பட்டவர் போல் மயங்கி கிடந்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சோனத்தையும் அவரது காதலன் நவீனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்களில் சோனத்தின் தாத்தா தக்தீர் சிங்கும் ஒருவர். அவர் வீட்டுக்கு வெளியே தனியாக ஓர் இடத்தில் படுத்து இருந்ததால் அவரது கழுத்து நெரிக்கப்படவில்லை. இதனால் தக்தீர் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கண்ட தகவல்களை மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் ராவ் தெரிவித்தார்.

காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் ஈவு இரக்கம் இன்றி தனது குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயதானவர்கள் கதி அதோகதிதான்

பெற்றோர்களின் கதி வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும். இப்போதே முதியோர் இல்லங்கள் பெருமளவில் தொடங்கப்பட்டு விட்டன. வசதியுள்ளோர் அத்தகைய இல்லங்களில் தங்குகின்றனர். ஏழை முதியோர்கள் பாடு?

-------------------------------------
கோவை, செப்.18- 2009 . செய்தி - தினத்தந்தி

மகன்கள் மற்றும் மருமகள்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு 73 வயது மூதாட்டி கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு இந்திராநகரை சேர்ந்தவர் ராஜம்மாள்(வயது 73). இவரது கணவர் வடிவேலு இறந்து விட்டார். கணவர் இறந்த பிறகு கூலி வேலை செய்து சொந்தமாக வீடு கட்டினார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது மகன்களான ஞானவேல்(42) மற்றும் செல்லத்துரை (40) ஆகியோருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் 2 மகன்களும் தங்களின் வயதான அம்மாவுக்கு வீட்டின் ஒரு ஓரத்தில் சிறு அறையை மட்டும் ஒதுக்கி விட்டு, வீட்டின் முழு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் தாய்க்கு உணவு வழங்குவதையும் நிறுத்திக்கொண்டனர். செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. தள்ளாத வயதிலும், கூலி வேலை, வீட்டு வேலை செய்து ராஜம்மாள் பிழைப்பை நடத்தி வருகிறார். இதனால் இவரை மகன்களும், மருமகள்களும் மிரட்டி வருகின்றனர்.

தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை வெளியேற்ற சதி நடப்பதை அறிந்த, ராஜம்மாள், கோவை 6-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வடவள்ளி வக்கீல் வெண்ணிலா மூலம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

எனவே தனது 2 மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்றும், தன்னை அவமரியாதை செய்யக்கூடாது என்றும், தனது பெயரில் உள்ள வீட்டை ஆக்கிரமித்து உள்ள மகன்களை காலிசெய்து கொடுத்தால், அதை வாடகைக்கு கொடுத்து, பிழைப்பு தேடிக்கொள்வேன் என்றும், அல்லது மாத வாடகையாக தலா ரூ.750 வழங்க வேண்டும் என்றும், மேலும் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அளிக்க உத்தரவு

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜோதி, வடவள்ளி போலீசாரை அழைத்து, வயதான ராஜம்மாளுக்கு, மகன்கள் மற்றும் மருமகள்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டர்.

ஜீவனாம்சம் ,வீட்டை காலி செய்வது மற்றும் வாடகை குறித்த புகார்கள் மீதான விசாரணைக்காக வழக்கு வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தன் சுகம், தன் வெறி, பெற்ற குழந்தைகளின் கதியென்ன தாயே!

கணவனும் பெற்றோரும் கள்ளக்காதலைக் கண்டித்ததால் கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அந்தக் குழந்தைகளைப் பற்றி பெற்ற தாய் எண்ணிப் பார்க்கவில்லை.

தாய்மையின் பெருமையைப் பற்றியெல்லாம் பழைய பஞ்சாங்கம் போல் பேசித் திரியாதீர். இது பெண்விடுதலைக் காலம். அந்தப் பெண்ணின் பாலியல் ஆசைகள் முழுமையாக திருப்தி செய்யப்படவேண்டும். அதுதான் முக்கியம். அதை விடுத்து குழந்தைகள், தாய்மை, பண்பாடு, கற்பு போன்ற பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கூறி பெண்ணினத்தை அடிமைப் படுத்த விடமாட்டோம்!

மனோரமா அம்மையாரின் கூற்றுப்படி அனைத்து கள்ளக்காதல்களும் கணவன்மார்கள் ஆண்மையில்லாமல் இருப்பதால்தான் நிகழ்கிறதாம். ஆண்மையின் அளவுகோல் என்ன, சில பெண்களிடம் மேலோங்கி நிற்கும் பாலியல் வெறியின் அளவுகோல் என்ன, கட்டின் புருஷனையும், பெற்ற பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக் காதலனோடு ஓடும் பெண்கள் கணவன் தன்னைத் திருப்தி செய்யாததால்தான் ஓடுகிறார்களா, அல்லது எளிதில் திருப்தியாகாமல் வகை வகையான செக்ஸ் அனுபவங்களைத் தேடி ஓடுகிறார்கள, அல்லது திருமணத்திற்கு முன்பே இருந்த கள்ள உறவை விடமுடியாமல் தொடர்கிறர்களா என்பதெல்லாம் நாம் அறியோம். வேண்டுமானால் இந்த விஷயத்தைப் பற்றிப் போராட இயக்கம் தொடங்கியிருக்கும் மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இனி இன்றைய செய்தியைப் பார்ப்போம்.

பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

பேரணாம்பட்டு, செப்.17- 2009. செய்தி - தினத்தந்தி.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல் ஜோடி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (வயது 27). திருமணமாகாதவர். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள பரவைக்கல் மந்திரிபட்டி பகுதியை சேர்ந்த காஞ்சனா (27) என்பவர் திருமணமாகி, தனது கணவர் வரதராஜனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், காஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது காஞ்சனாவின் கணவர் வரதராஜுக்கு தெரிய வந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனும், காஞ்சனாவும் பெங்களூரில் இருந்து எருக்கம்பட்டுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியை காணாத வரதராஜன், வெங்கடேசனுடன் காஞ்சனா சென்றிருக்கலாம் என்று கருதி எருக்கம்பட்டு கிராமத்திற்கு வந்து வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். அதற்கு சுப்பிரமணி, அவர்கள் இருவரும் வந்ததும் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறியதை அடுத்து வரதராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனும், காஞ்சனாவும் எருக்கம்பட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சுப்பிரமணி, திருமணமான பெண்ணை அழைத்து கொண்டு வந்திருக்கிறாயே என்று வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்தி என்பவரது வீட்டிற்கு காஞ்சனாவுடன் சென்று உள்ளார்.

பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். அப்போது கார்த்தி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலை

இந்தநிலையில் கள்ளக்காதல் ஜோடி வெங்கடேசன், காஞ்சனா இருவரும் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்று பார்த்த கார்த்தி, இருவரும் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சாரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கணவனுக்கு ஒரு வெட்டு கள்ளக் காதலனுக்கு ஒரு வெட்டு

முதலில் கணவனைக் கொன்ற கதை (தினமலர்)

குடிபோதை கணவரை வெட்டி கொலை செய்த மனைவி கைது: கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு .செப்டம்பர் 16,2009.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கல்யாணி(55). அவரது மனைவி பூலம்மாள்(47). திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன அவர்களுக்கு குழந்தையில்லை.

மதுகுடிக்கும் பழக்கமுள்ள கல்யாணி, பணம் கேட்டு அடிக்கடி மனைவி பூலம்மாளை அடித்து உதைப்பார். கடந்த 10ம் தேதி குடிபோதையில் வந்த கல்யாணி, பணம் கேட்டு பூலம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூலம்மாள், கணவர் கல்யாணியை கீழே தள்ளினார். அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார்.

படுகாயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை வீட்டின் முன்புறமுள்ள கழிவு நீர்த் தொட்டிக்குள் போட்டு அதில் மண்ணைப் போட்டு, தொட்டியை மூடினார்.

"கணவர் எங்கே?' என கேட்டவர்களிடம், வெளியூர் சென்று விட்டதாக கூறினார். வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதால் முறப்பநாடு போலீசுக்கு தகவல் சென்றது. போலீசார், பூலம்மாளிடம் விசாரித்துள்ளனர். "முறைப்படி'யான விசாரணையில், கணவரைக் கொன்று உடலை கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு மறைத்ததை ஒப்புக் கொண்டார்.

பூலம்மாளை போலீசார் நேற்று கைது செய்து, கல்யாணி உடலை மீட்டனர். கள்ளத்தொடர்பு காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், கொலையில் உடந்தையாக இருந்ததாக பூலம்மாள் உறவினர் ஒருவரை தேடிவருகின்றனர்.
====================

செய்தி - 2

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண்

ஓட்டப்பிடாரம், செப்.16- 2009 (தினத்தந்தி)

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண் அடைந்தார். "கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டதாக" அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கலைச்செல்வன் நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.

காஞ்சனாவும், அவரது குழந்தைகளும் ஊரில் வசித்து வந்தனர். அப்போது காஞ்சனாவுக்கும், அதே ஊரை சேர்ந்த சேர்மராஜ் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜ் தங்கை சேர்மக்கனிக்கும், காஞ்சனா தம்பி ரத்தினவேலுவுக்கும் திருமணம் நடந்தது.

இதன் பின்னர் சேர்மராஜும், காஞ்சனாவும் உறவினர்கள் ஆகினர். இதன் பின்னர் அவர்களின் தொடர்பு மேலும் வலுத்தது. இந்த விவகாரம் வெளிநாட்டில் வேலைபார்த்த காஞ்சனாவின் கணவர் கலைச்செல்வனுக்கு தெரியவந்தது. ஊருக்கு வந்த அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் காஞ்சனாவுக்கு, சேர்மராஜை கைவிட மனம் இல்லை.

கடைசியில் கணவரா?, கள்ளக்காதலனா? என்ற கேள்வியில், காஞ்சனா கணவரை பிரிந்தார். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வன், காஞ்சனாவை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் குழந்தைகளுடன், காஞ்சனா தனி வீட்டில் வசித்து வந்தார்.

இதன் பின்னர் சேர்மராஜ் அடிக்கடி காஞ்சனா வீட்டுக்கு வந்து போனார். இது அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே சேர்மராஜை விட்டு பிரிய காஞ்சனா முடிவு செய்தார். ஆனால் நீண்ட நாட்களாக நீடித்த கள்ளத்தொடர்பை விட்டுவிட சேர்மராஜவக்கு மனம் இல்லை.

இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்துவந்தது. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வரும்படி காஞ்சனா, சேர்மராஜை அழைத்தார். அதன்படி அவரும் சென்றார். அப்போது இருவருக்கும் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா அரிவாளால், சேர்மராஜ் கழுத்தின் பின்புறத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

சேர்மராஜ் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே காஞ்சனா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சேர்மராஜை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட காஞ்சனா சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "எனக்கும், சேர்மராஜுக்கும் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனது கணவரை பிரிய நீதான் காரணம் என்றும், கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்றும் சேர்மராஜிடம் கூறினேன்.

இனிமேல் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்த போது, அவர் அலட்சியப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டினேன்" என்று காஞ்சனா வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

================

இரண்டு நிகழ்வுக்குமே கணவனின் ஆண்மையின்மைதான் காரணமாக இருந்திருக்குமோ? நமக்கென்ன தெரியும்? மனோரமா அம்மையார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

கருத்து யுத்தம் வீடியோ





காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!

மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?

ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.

இது செய்தி.

சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?

ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!

இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!

பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!

தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!

ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!

பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!

மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!

மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி

புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.

எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.

498A பொய்க்கேசு போட்டு சூறையாடிய பின் வாழ்க்கையைத் தொலைத்த பெண்கள்

அண்மையில் கோவையில் நடந்த இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டத்தைப் பற்றிய செய்திக் குறிப்பில் தினகரன் நாளிதழ் "தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்" என்று தலைப்பிட்டிருந்தது.

இதைக்கண்ணுற்ற மூன்று பெண்மணிகள் இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள்.

அவர்கள் மூவருமே தங்கள் கணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் மீது 498A உட்பட என்னென்ன பொய்க் கேசுகள் போட முடியுமோ அவையெல்லாவற்றையும் வஞ்சனையில்லாமல் போட்டு, கைது செய்வித்து "உள்ளே தள்ளி", அதன்பின் கறக்க இயன்ற வரையில் பணத்தைக் கறந்தபின் விவாகரத்து பெற்றவர்கள். சட்டங்களின் ஓரவஞ்சனைத் தன்மையையும் தீர்ப்புகளின் ஒரு சார்பு மனப்பான்மையையும் கைக்கொண்டு தன் குழந்தைகளின் காப்புரிமையையும் கண்வன்மார்களிடமிருந்து பறித்து முழுதும் தனதாக்கிக் கொண்டவர்கள். அதில் இருவர் பெரிய தொகையொன்றை தத்தம் கண்வனிடமிருந்து பெற்றவர்கள். ஒருவர் மாதாமாதம் ஜீவனாம்சம் பெற்று வருபவர்.

சரி, அவர்களுடைய கோரிக்கைதான் என்ன?

மீண்டும் தங்கள் கணவன்மார்களிடம் சேர்த்து வாழ வைக்க வேண்டுமாம்! இது எப்படி இருக்கு!

காரணம்?

மூவருக்குமே வயது முப்பதுகளில். குழந்தைகள் வேறு. இளமை முறுக்கும் தோற்றமும் பறிபோய் விட்டன.

கல்யாணச் சந்தையில் விலை போகவில்லை. இவர்களது பொய் வழக்கு புராணம் தெரிந்தபின் எந்த மாங்காய் மடையன் இவர்களைச் சீந்துவான்!

மறுபடியும் அதே முட்டாள் கணவர்களைப் பீடித்து பேயாட்டலாம் என்று கனவு காண்கிறார்கள், அது நடக்கவே நடக்காது என்று தெரிந்தும்!

சமீபத்தில் நாங்கள் கூர்ந்து நோக்கிய பல 498A கேசுகளில் பொய்க் கேசு போட்ட பெண்குலத்திலகங்கள் வழக்கு நடக்கும்போதே வக்கீல்களிடமும், கோர்ட்டு வராண்டாக்களிலும் அலைந்து ஓரிரு ஆண்டுகளில் பத்து வயது கூடிய தோற்றம் பெற்று விடுகிறார்கள்.

சட்டங்கள் பொய் வழக்கு போட தங்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்ற நிலையைக் கைக்கொண்டு கண்வன் மற்றும் மாமியார், மாமனார், நாத்தனார் போன்றோரை எடுத்த எடுப்பில் கைது செய்வித்து ஆட்டம் காட்டலாம் என்ற வெறியில் காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்கும் படியேறுகிறார்கள். அடுத்து வக்கீல் காண்பிக்கும் இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு பெரிய துகை ஒன்றை கணவனிடமிருந்து கறக்கிறார்கள். குழந்தைகளையும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று நீதிபதிகள் முன் கண்ணீர் சிந்தி தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெறுகிறார்கள்.

எல்லாம் ஆயிற்று. பிறகு?

பிறகு..??

கலைஞர் டிவியில் நாளை கருத்து யுத்தம்

நாள்: 13-09-2009. ஞாயிறன்று பிற்பகல் 1-30 மணி முதல் 2-30 மணி வரை.

நிகழ்ச்சியின் பெயர்: "கருத்து யுத்தம்" .கலைஞர் டிவியில் காணத்தவறாதீர்கள்.

498A பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டசுமார் 50 நபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்தகைய வழக்குகளைப் போட்டு குடும்பங்களை சிதறடிக்கும் நபர்களும் அவர்களைத் தூண்டும் பெரிய இடத்துப் பேர்வழிகளும் பங்கேற்கின்றனர்.

கட்டாயம் நிகழ்ச்சியைப் பார்த்து உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.

நன்றி.

வீட்டுக்கு வீடு 498A வழக்கு

இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.

"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:

  • உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
  • உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
  • அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
  • எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
  • உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?

சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?

பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.

மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-

பரமக்குடி,செப்.9-

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரி மீது 498A வழக்கு

சென்னை, செப்.8- 2009. செய்தி: தினத்தந்தி.

சுட்டி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=512726&disdate=9/8/2009&advt=1

ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி மீது அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை தடுப்பு உதவி போலீஸ் கமிஷனருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தண்டியப்பன். இவரது மகள் ஷர்மிளா நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இளம் பெண் ஷர்மிளாவோடு சீனியர் வக்கீல் சுதா ராமலிங்கமும் (இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) வந்திருந்தார். ஷர்மிளாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.சாமுவேல் என்பதாகும். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.

தனது கணவர் மீது ஷர்மிளா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு, சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மானேஜர் அந்தஸ்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.

இந்த நிலையில், பரமக்குடியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை வந்து பெண் பார்த்தார்கள். எனது பெற்றோரையும் சந்தித்து பேசினார்கள். எனது கணவரும் முறைப்படி எனது அலுவலகத்தில் வந்து என்னை பெண் பார்த்தார்.

`நான் ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், நீ இந்த வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும்' என்றும் கூறினார். நானும் அவரை திருமணம் செய்ய சம்மதித்து எனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.

2.2.2009 அன்று சுயமரியாதை முறைப்படி சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எங்களது திருமணம் நடந்தது. அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்துக்கு முன்புவரை நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து முருகர் பக்தன் என்றும், திருப்பதி ஏழுமலையான் பக்தன் என்றும் எனது கணவர் பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தார். திருமணத்துக்கு பிறகுதான் அவரது சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.

நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டோம்.

எனது கணவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறிவிட்டதாகவும், சாமுவேல் என்ற பெயரை `சாம்வேல்' என்று மாற்றிவிட்டதாகவும்' கூறினார். அவரை நல்லவர் என்று நம்பி நான் மோசம் போனேன். திருமணம் முடிந்த பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் எங்களது முதலிரவு நடந்தது. முதலிரவின்போது நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்தார்.

அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னவர் சிக்கன் பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டார். என்னையும் கட்டாயப்படுத்தி சிக்கன் பிரியாணியை சாப்பிட சொன்னார்.

அசைவம் எனக்கு பிடிக்காததால், அவர் கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு நான் வாந்தி எடுத்தேன். திருமணத்துக்கு முன்பு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது கணவர் கூறினார். இருந்தாலும் எனது பெற்றோர் 78 சவரன் நகைகள் எனக்கு வரதட்சணையாக போட்டு அனுப்பினார்கள்.

முதலிரவு அறைக்குள் நுழைந்தவுடன் நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழற்றி எடுத்துக்கொண்டு வா என்று உத்தரவுபோட்டார். நானும் நகைகளை கழற்றி ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.

நகைகளை கையில் தூக்கி பார்த்து `நான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, எனக்கு வரதட்சணையாக இவ்வளவு நகைகள்தான் போடுவீர்களா' என்று கேவலமாக பேசினார். எங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும்படி பெற்றோர்கள் அழைத்தார்கள். பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். 14.2.2009 அன்று விமானத்தில் என்னை டெல்லி அழைத்து சென்றார். எனது பெற்றோர் விமானநிலையத்துக்கு வந்து தான் வழி அனுப்பினார்கள். டெல்லியில் ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம். அங்கும் நண்பர் முன்பே என்னை கேவலமாக பேசினார்.

காஷ்மீரிலும் என்னை ஒரு சிறை பறவை போலவே வீட்டில் அடைத்து வைத்திருந்தார். வேலைக்காரர்கள் முன்னிலையில் என்னிடம் அன்பாக பேசுவதுபோல் நடிப்பார்.

வேலைக்காரர்கள் போனதும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். ஒருகட்டத்தில் என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டார்.

போனில் பேசி அடியாட்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ரூ.5 லட்சம் கூலி தருகிறேன். ஒரு பெண்ணை கொலை செய்து காஷ்மீர் பனிகட்டியில் புதைக்க வேண்டும் என்று என் முன்னாலேயே பேசினார். போதைப்பொருள் வழக்கில் எனது பெற்றோரை சிக்கவைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.

இனிமேலும் அவரோடு வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று பயந்தேன். எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி சென்னை வந்துவிட்டேன்.

அவர் முழுக்க, முழுக்க என்னை ஏமாற்றி மோசடி திருமணம் செய்துவிட்டார். கிறிஸ்தவனாக இருந்துகொண்டே இந்துவாக மதம் மாறிவிட்டதாக பொய் சொன்னார். வரதட்சணை கேட்டு என்னை தினந்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

ஷர்மிளா கொடுத்த புகார் மனு தொடர்பாக அவரது வக்கீல் சுதா ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது கட்சிக்காரர் ஷர்மிளா கணவரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். சுயமரியாதை திருமணம் என்பது இந்து பெண்ணுக்கும், இந்து மாப்பிள்ளைக்கும் தான் நடக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இந்து பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.

ஷர்மிளாவின் கணவர் சாமுவேல் வழுக்கை தலை உடையவர் ஆவார். ஷர்மிளாவை பெண் பார்க்க வந்தபோது தலையில் தொப்பியோடு வந்துள்ளார். ஏழுமலையானுக்கு மொட்டை போட்டுள்ளதால் தலையில் தொப்பி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்தின்போது தலை நிறைய முடியோடு வந்துள்ளார்.

முதலிரவில் அவரது முடியின் ரகசியம் அம்பலமாகிவிட்டது. அவர் தலையில் `விக்' அணிந்து ஏமாற்றி உள்ளார். முதலிரவின்போது `விக்'கை கழற்றி வைத்துவிட்டு வழுக்கை தலையோடு இருந்துள்ளார். முதலிரவின்போதே சாமுவேலின் வழுக்கை தலையை பார்த்து, ஷர்மிளாவின் வாழ்க்கையும் வழுக்க ஆரம்பித்துவிட்டது. சாமுவேல் செய்த கொடுமையால் கர்ப்பமாக இருந்த ஷர்மிளாவின் வயிற்றில் இருந்த குழந்தையும் `அபார்ஷன்' ஆகிவிட்டது.

கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்து என்று பொய் சொல்லிக்கொண்டு சுயமரியாதை திருமணம் நடத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சாமுவேல் வடமாநில பெண் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2 மாத காலமாக தீர ஆலோசித்து தான் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாமுவேல் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இவ்வாறு வக்கீல் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.

ஷர்மிளா கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை கொடுமை தடுப்பு உதவி கமிஷனர் விமலாவுக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அரசு வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற்று இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.

============

இதுபோல் பரவலாக மேல் மட்டங்களில் 498A கேசுகள் மேலும் பற்பல குற்றப் பிரிவுகளோடு சேர்த்துப் போடப்பட்டு ஜெகஜ்ஜோதியாக வலம் வந்தால்தான் ஒரு விமோசனம் கிட்டும்! தொடரட்டும் வி.ஐ.பி 498A கேசுகள்!

=====================

தினமலர் அளித்துள்ள மேலதிக விவரங்கள்:-

சுட்டி: http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887

சென்னை :வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை அடித்து கொடுமைப்படுத்தினர். ஐ.பி.எஸ்., அதிகாரியான என் கணவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் வங்கியில் பணியாற்றும் பெண் அதிகாரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசிக்கிறார் எம்.பி.ஏ., பட்டதாரி சர்மிளா. சென்னையில், கரூர் வைசியா வங்கியில், உதவி மேலாளராக வேலை பார்க்கிறார்.

அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல். ஜம்மு - காஷ்மீர் ஒதுக்கீடு ஐ.பி.எஸ்., அதிகாரி. ஜம்முவில் 13வது பட்டாலியன் கமாண்டன்டாக பணியாற்றி வருகிறார்.அவர், கிறிஸ்தவ யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் சுயமரியாதை திருமணமாக, இந் தாண்டு பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடந்தது.சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில், எங்கள் முதல் இரவு நடந்தது. ஓட்டல் அறைக்கு நள்ளிரவில் குடிபோதையில் வந்த சாமுவேல், என்னையும், என் குடும்பத்தாரையும், ஆபாசமாகவும், கேவலமாகவும் பேசி, "டார்ச்சர்' செய்தார்.

கணவருடன், பிப்ரவரி 14ம் தேதி, டில்லி வழியாக காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னையும், என் குடும்பத்தாரையும் அசிங்கமாகப் பேசி, அடித்து சித்ரவதை செய்தார்.என் கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக உள்ள அவர், என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது. சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார்.என் கணவர் சாமுவேல், மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார். கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டுள்ளார். காய்ச்சல், குளிர் ஜுரத்தில் படுத்தேன். மருத்துவ சிகிச்சை பெறக் கூட அனுமதிக்கவில்லை. இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமை படுத்தினார்.

இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பி விட்டேன்.என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார். மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கமிஷனர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை கமிஜனர் ஆசியம்மாளிடம், இந்த புகாரை சர்மிளா அளித்தார். அவர் மனு, குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனைவிக்கு கள்ளத்தொடர்பால் விவாகரத்து முடிவு : ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல் வாக்குமூலம்:

சர்மிளா புகார் கொடுத்த தகவல் அறிந்து வந்த சாமுவேல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது:

எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு வெறொருவருடன் தொடர்புள்ளது. அதை மறைக்கத்தான் இப்படி என் மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார்.மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

==========

அதுசரி. சாதாரண கணவனாக இருந்தால் ஒரு விசாரணையுமின்றி புகார் கொடுத்தவுடனேயே கைது செய்து விடுவார்கள். இப்போது விசாரனை செய்கிறார்களாம்!!

நடக்கட்டும். எப்படியாவது இந்தப் பொய்க் கேசுச் சட்டங்களிலிருந்து அப்பாவி கணவர்களுக்கு விமோசனம் கிட்டினால் சரி!

கோவை கூட்டத்தைப் பற்றிய செய்திகள்

தினகரன் - கோவை பதிப்பு - பக்கம் - 13 (5-09-2009)

தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்

கோவை, செப். 5: பிரிவில் இருந்து தம்பதிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் செயல்படுகிறது. இதன், மாநில அமைப்பாளர் சுரேஷ்ராம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன. ஒரு வழக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை நடக்கிறது. குடும்பம் சிதைந்து விடுகிறது. இந்திய அளவில் கடந்த 2005-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 52 ஆயிரத்து 483 கணவன்களும், 28 ஆயிரத்து 188 மனைவிகளும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2006ல் 55 ஆயிரத்து 452 கணவன்களும், 29 ஆயிரத்து 869 மனைவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப வழக்குகள், குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட அளவிலும் இந்த இயக்கம் விரிவு படுத்தப்படுகிறது.

கோவை மாவட்ட அமைப்பாளராக பிரகாஷ், ஈரோடு மாவட்ட அமைப்பாளராக கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம். சட்டஉதவி மற்றும் ஆலோசனை இலவசமாக அளிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களுக்கு 99410-12958, 96294-50331 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

=================

முக்கிய குறிப்பு:-

மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!

==================

-------------------

7-9-2009. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னைப் பதிப்பு - பக்கம்: 6


கோவையில் கோலாகலத் தொடக்கம்

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் கோயம்புத்தூரில் நேற்று (04-09-2009) தன் கிளையைத் தொடங்கியுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தினமணி வெளியிட்டுள்ள செய்தி இதோ:-

ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை

கோவை, செப். 4: ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை என்று இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்த அமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் சுரேஷ்ராம், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்பெற்ற இந்தியாவில் குடும்ப பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

அமெரிக்காவில் வளர் இளம் பெண்கள் (டீன் ஏஜ்) கருத்தரிக்கும் சம்பவம் அதிகமாக உள்ளது.

இதனால், அங்கு தந்தை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இப்போது தந்தை இல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு ஆதரவாக 44 சட்டப்பிரிவுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வரதட்சிணை கொடுமை என பொய்யாக தகவல் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள்தான் அதிகம் நடக்கின்றன.

வரதட்சிணை வழக்கில் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.

ஆனால், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கப்படுகிறது.

குறிப்பாக படித்த, வசதி படைத்த ஆண்கள்தான் இவ் வழக்குகளால் பாதிக்கப்படுகின்றனர்.

சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

ஆனால், அவர்களை தண்டிக்க சட்டம் இல்லை. இதனால், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன.

வரதட்சிணை வழக்குகளால் நீதிபதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஓராண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பெண்கள் (மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகள்) கைது செய்யப்படுகின்றனர்.

தந்தை, தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோரை உள்ளடக்கியதுதான் குடும்பம். ஆனால், இப்போது தந்தை, தாய், மகன் அல்லது மகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்று மாறி வருகிறது.

இதனால், வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

குடும்ப பிரச்னைகள் காரணமாக 2006-ல் நாடு முழுவதும் 52 ஆயிரத்து 483 ஆண்களும், 2007-ல் 55 ஆயிரத்து 452 ஆண்களும் தற்கொலை செய்துள்ளனர். அதேநேரத்தில் 2006-ல் 28 ஆயிரத்து 188 பெண்களும், 2007-ல் 29 ஆயிரத்து 869 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.

இருதரப்பையும் ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் தற்கொலை செய்யும் விகிதம் இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பெண் உரிமை என்ற பெயரில் ஆண்களை அடிமைத்தனம் செய்யும் நிலை பரவி வருகிறது. எனவே, ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனிச் சட்டம், அமைச்சகம் தேவை என்றார்.

இந்த அமைப்பில் ஆலோசனை பெற விரும்புவோர் 9840587653 (சென்னை), 9894103539 (ஈரோடு), 9790019658, 9629450331 (கோவை) என்ற செல்போன்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், www.tamil498a.blogspot.com, www.savefamily.org, www.saveindianfamily.org என்ற இணையதள முகவரிகளில் தொடர்புகொள்ளலாம்.
-------

இந்தச் செய்திக் குறிப்பின் வலைச்சுட்டி இது.

================================

"தி ஹிந்து" ஆங்கில இதழில் வெளிவந்துள்ள செய்தி:

Movement protecting men’s rights launched

Staff Reporter

Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.

Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.

They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.

Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.

In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with ‘terrorising legal weapons’ only led to retribution.

They dubbed the cited legal provisions as ‘draconian women-centric laws’. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.

They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.

They demanded a separate Ministry for Men’s Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.

For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or ww.savefamily.org.

இதன் சுட்டி: http://www.hindu.com/2009/09/05/stories/2009090550920200.htm

நீதிபதிகளுக்கு சட்ட அறிவு போதாதென்கிறார் தலைமை நீதிபதி

"உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல நீதிபதிகளுக்கு சட்ட அறிவே இல்லை. சட்ட நுணுக்கங்களையோ, யதார்த்த நிலையையோ, சாட்சியங்களின் தன்மையையோ கருத்தில் கொள்ளாமலும், சமூகப் பிரக்ஞை இல்லாமலும் இஷ்டத்திற்கு தீர்ப்பு அளிக்கிறார்கள்."

இப்படிச் சொன்னவர் யார்? சும்மா அப்பை சப்பையான ஆளில்லையா சொன்னவர்! இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் அப்படிச் சொல்லி விசனப்பட்டிருக்கிறார்!

அவர் மேலும் கூறியிருப்பவை:-

என்ன ஆணையிடுகிறோம், அது செல்லுமா செல்லாதா, அது நிறைவேற்றத் தக்கதுதானா என்றெல்லாம் அலசிப் பார்க்காமல் தீர்ப்பு எழுதுகிறார்கள் நீதிபதிகள்.

அதுவும் 498A சட்டம் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ப்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தலைமை நீதிபதி அவர்கள்.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

தவிரவும் வழக்குகளை மிகவும் தாமதப் படுத்துகிறார்கள். நெறிப்படுத்துவதற்குத் தவறுகிறார்கள். அதனால் வழக்குகள் கோடிக் கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

இதுபோல் அவர் பேசியிருப்பது சென்ற ஆகஸ்டு 30-ம் நாள் போபாலில். "டெலிகிராஃப்" இதழில் வெளிவந்த அவருடைய பேச்சு விவரத்தின் சுட்டி இதோ.

ஆனால் என்ன பேசி என்ன ஆகப் போகிறது. நேற்று சென்னையில் 89 வயது முதியவர் மீது பிடி வாரண்டு அனுப்பியிருக்கிறார் ஒரு நீதிபதி. ஏன் தெரியுமா? அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வில்லையாம். அந்தக் கிழவனாரை அவருடைய குழந்தைகள் யாரும் கவனிப்பதில்லை. சோத்துக்கே லாட்டரி. குழந்தைகள் அனைவரும் அம்மா பக்கம். (அம்மாக்கள் செய்யும் முதல் வேலையே குழந்தைகள் மனத்தில் தகப்பன் மேல் வெறுப்பை ஊட்டி விஷ வித்தை விதைப்பதுதானே!)

அந்தக் கிழவனாரை சன் டிவியில் பேட்டி எடுத்தார்கள். அவர் பரிதாபமாக, "பணத்திற்கு நான் எங்கே போவேன் ஐயா, குழந்தைகள் கொடுத்தால் அதை மனைவிக்கு நீதிபதி சொல்லியபடி ஜீவனாம்சம் கொடுக்கிறேன்" என்று அழுதிருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் நீதிபதி எங்கே காதில் வாங்கப் போகிறார். அவரைப் பொருத்த வரையில் மனைவி கேட்டு விட்டால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். இல்லையென்றால் கிட்னியை விற்றுத்தான் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறையைத்தான் தலைமை நீதிபதி சாடியிருக்கிறார். ஆனால் என்ன பயன். ஆண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுங்கோன்மை நிற்கப்போகிறதா என்ன!

ஆகையால் எந்த வயது ஆண்களும் 498A, ஜீவனாம்சச் சட்டங்கள் போன்றவற்றிலிருந்து தப்பவே முடியாது. "நமக்கு இருப்பது பெண் குழந்தைகள்தானே, ஆண்பிள்ளைகள் கிடையாதே" என்று எண்ணி இருமாப்புடன் பெண்ணியவாதம் பேசிக்கொண்டு, இங்கு வந்து அனானியாக பின்னூட்டமிட்டுச் செல்லும் பெரியவர்கள் கூட எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற நிலைக்கு ஆளாகலாம். யார் கண்டது!

இனி செய்தி. தட்ஸ்தமிழ் தளத்தில் வெளிவந்தது:

சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக 89 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை குடும்பல நல நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செங்குன்றம் ரோட்டில் வசித்து வருபவர் சிம்சன் கண்ணன்(89). இவருக்கும் இவரது மனைவி ராஜலட்சுமிக்கும் (80) கடந்த 1949ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது சிம்சன் மனைவியுடன் கோபித்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறும் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

திருமணம் நடந்த சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் 89 வயதில் ஒருவர் விவாகரத்து கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சிம்சனின் மனைவி, கணவர் தன்னை பிரிந்துவிட்டால் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 1500 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிம்சன் கண்ணன் அவரது மனைவிக்கு ரூ. 1500 ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.

ஆனால், சிம்சன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடு்த்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் சிம்சனை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, 89 வயது சிம்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்

தம்பதிகளைப் பிரிச்சுடாதீங்க - சல்மா அறிவுரை

தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் சல்மா அவர்கள் 498A சட்டத்தின் கொடூரமான பயன்பாடு குறித்த சரியான அவதானிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெண்கள் புகார் கொடுத்தவுடன் அதன் அடிப்படையில் வழக்கு, கைது என்று "தடாலடி நடவடிக்கையில்" இறங்கி விடாதீர்கள் (குற்றம் சாட்டப்பட்ட கணவன் மற்றும் அவனுடடய பெற்றோர், உறவினர் மீது) என்று பெண் போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

இது மிகச் சரியான அறிவுரைதான். இதைக் கடைப்பிடித்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் "உடனே அவர்களைக் கைது செய்ய வேண்டும்" என்று கூக்குரலிட்டுப் பிடிவாதம் பிடிக்கும் பெண்மணிகளும் (அப்போதுதானே பணம் கறக்க முடியும்), அவர்களுக்குத் துணைபோகும் பணத்தாசை பிடித்து அலைகின்ற வக்கீல்களும் சேர்ந்து ஆடும் பேயாட்டத்தை யார் கண்ட்ரோல் செய்வது!




நன்றி - தினமலர்.