40 வயதுக்காரிக்கு 20 வயது கள்ளக்காதலன்!

கள்ளக்காதல் படுத்தும் பாடு!

20 வயது லாரி கிளீனருடன் ஓடிய 40 வயது பெண் கவுன்சிலர்
"கணவர் வேண்டாம்... காதலனே போதும்'' என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்

பெங்களூர், செப்.24- 2009. தினத்தந்தி

கணவர், குழந்தைகளை விட்டு விட்டு கிராம பஞ்சாயத்து பெண் கவுன்சிலர் ஒருவர், தன்னை விட 20 வயது குறைந்த லாரி கிளீனரான தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சனிவார சந்தே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் மஞ்சுளா (வயது 40). இவருக்கும், ரவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 10 வயதில் 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மஞ்சுளா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை கணவர் ரவியும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

வாலிபருடன் ஓட்டம்

இதற்கிடையே, மஞ்சுளாவுக்கும், 20 வயதான லாரி கிளீனர் சீனிவாஸ் என்ற வாலிபருக்கும் ஏற்கனவே கள்ளக்காதல் இருந்தது. மஞ்சுளா தனது இளம் காதலர் சீனிவாசுடன் செல்வதற்காக வீட்டை விட்டு ஓடியது தெரிய வந்தது.

சீனிவாஸ் லாரி உரிமையாளரின் பணத்தை திருடிக்கொண்டு அந்த பணத்தில் மஞ்சுளாவை கூட்டிக்கொண்டு பெங்களூருக்கு வந்தார். இங்கு அவர்கள் லாட்ஜில் அறை எடுத்து தங்கிக் கொண்டு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

ஓட்டலில் தங்கினர்

பின்னர் கள்ளக்காதல் ஜோடி பெங்களூரில் இருந்து குஷால் நகருக்கு சென்றனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

இதற்கிடையே, லாரி உரிமையாளர் தனது பணத்தை திருடிச் சென்ற சீனிவாசை பற்றி விசாரித்தார். அப்போது சீனிவாஸ், மஞ்சுளாவுடன் உல்லாசமாக சுற்றித்திரிவது தெரியவந்தது. உடனடியாக அவர் இதுபற்றி மஞ்சுளாவின் கணவர் ரவிக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களிடம் பிடிபட்டனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி தனது உறவினர் மற்றும் ஊர் பெரியவர்களுடன் குஷால் நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்று, அங்கு சீனிவாசுடன் தங்கி இருந்த மஞ்சுளாவை மடக்கி பிடித்தார்.

மஞ்சுளாவை கணவர் ரவியுடன் சேர்ந்து வாழும்படி பெரியவர்கள் அறிவுரை கூறினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மஞ்சுளா தனது நிலையில் இருந்து சற்றும் இறங்கி வரவில்லை. வாழ்ந்தால் சீனிவாசுடனே வாழ்வேன் என்று உறுதியாக கூறி விட்டார். குழந்தைகளை என்னுடன் அனுப்ப வேண்டாம், நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டார்.

கணவருடன் வாழ பிடிக்கவில்லை

இதையடுத்து, மஞ்சுளாவையும், சீனிவாசையும் அவர்கள் அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீசார் மஞ்சுளாவிடம் பேசினர். ஆனாலும், அதிலும் மஞ்சுளா மசியவில்லை. தனது இளம் காதலருடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தார்.

`எனக்கு கணவர் ரவியுடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை. நான் எனது காதலர் சீனிவாசுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்' என்று பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரிடம் எழுதி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மஞ்சுளா, அவரது இளம் காதலர் சீனிவாசுடன் அங்கிருந்து சென்றார். அவரது கணவர் ரவி தனது 2 குழந்தைகளுடன் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார்

===============

இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவன்மீது ஆயிரக் கணக்கான கேசுகளைப் போட்டு உள்ளே தள்ளியிருப்பார்கள். மேலும் அந்தப் பெண்குலத் திலகம் அவன்மீது ஜீவனாம்சக் கேசு போடுவாள். உடனே நம் நீதிபதிகள், "அவள் பாவம், கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் பணம் வேண்டாமா, நீ உன் கிட்னியை விற்றாவது ஜீவனாம்சம் கொடுக்கத்தான் வேண்டும்" என்று தீர்ப்பு அளிப்பார்.

தேவையா இந்தத் திருமணங்கள்!

1 மறுமொழி:

Anonymous said...

காமத்திற்கு கண் இல்லை என்பது உண்மையாகி வருகிறது.


2 குழந்தைகளுக்கு தாயான மஞ்சுளா உடம்பில் நிறைந்து இருந்தது தாய்மை உணர்வு இல்லை, காம உணர்வே